நிலக்கரி அமைச்சகம்

நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்கும் லட்சியத் திட்டம்

Posted On: 13 AUG 2024 3:51PM by PIB Chennai

நிலக்கரி உற்பத்தியை கணிசமாக அதிகரிக்கவும், இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை நம்பியிருப்பதைக் குறைக்கவும், சுரங்கத் துறையில் அதிநவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவும், இந்திய நிலக்கரி நிறுவனம் கீழ் உள்ள பெரிய நிலக்கரி சுரங்கத் திட்டங்களுக்கு சுரங்க மேம்பாட்டாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர் (எம்.டி.) களை ஈடுபடுத்துவதன் மூலம் நிலக்கரி சுரங்கத்தில் புரட்சியை ஏற்படுத்தும் முயற்சியை நிலக்கரி அமைச்சகம் தொடங்கியுள்ளது.

செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துதல், உற்பத்தித்திறனை அதிகரித்தல், சுரங்க செலவுகளைக் குறைப்பதன் மூலம் நிலக்கரி உற்பத்தியை கணிசமாக அதிகரித்தல் என்பவை சுரங்க மேம்பாட்டாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை ஈடுபடுத்துவதன் முதன்மை குறிக்கோளாகும்.  அங்கீகரிக்கப்பட்ட சுரங்கத் திட்டங்களின்படி இந்திய நிலக்கரி நிறுவனத்திற்கு நிலக்கரியை அகழ்வாராய்ச்சி செய்தல், பிரித்தெடுத்தல், வழங்குதல் போன்ற பணிகளை இந்த எம்.டி.ஓக்கள் மேற்கொள்கின்றனர். இதன் மூலம் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்கின்றனர். மேம்பட்ட தொழில்நுட்ப திறன்களுக்காக அறியப்பட்ட எம்.டி.ஓக்களுடன் கூட்டு சேர்வதன் மூலம், சுரங்க நடைமுறைகளை நவீனமயமாக்குவதையும் செயல்பாட்டு செயல்திறனை மேம்படுத்துவதையும் இந்திய நிலக்கரி நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி, 18 சுரங்கங்கள் முன்னணி தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இது இந்த லட்சிய முயற்சியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. எம்.டி..க்களின் ஈடுபாடு நிலக்கரி உற்பத்தியில் கணிசமான பங்களிப்பை உறுதிசெய்கிறது, இது மேம்பட்ட உற்பத்தி மற்றும் செயல்பாட்டு சிறப்பை உறுதி செய்கிறது.

திறந்த உலகளாவிய டெண்டர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த செயற்பாட்டாளர்கள், ஒப்பந்தத்திற்கு ஏற்ப, அகழ்வாராய்ச்சி மற்றும் பிரித்தெடுத்தல் முதல் நிலக்கரி விநியோகம் வரை முழு சுரங்க செயல்முறையையும் மேற்பார்வையிடுவார்கள். அவர்களின் ஈடுபாடு மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் இணையற்ற செயல்பாட்டு செயல்திறனை அமைப்பில் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது உற்பத்தி திறன்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை ஏற்படுத்தும்.

உற்பத்தியை அதிகரிப்பதைத் தவிர, மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றப் பிரச்சினைகள், நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் அனுமதிகள் போன்ற முக்கியமான அம்சங்களை எம்டிஓக்கள் நிர்வகிப்பார்கள். சுற்றுச்சூழல் தர நிர்ணயங்களை கண்டிப்பாக பின்பற்றுவதை உறுதி செய்ய அவர்கள் மாநில மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள். எம்.டி..க்களுடனான ஒவ்வொரு ஒப்பந்தமும் 25 ஆண்டுகள் அல்லது சுரங்கத்தின் ஆயுட்காலம், எது குறைவானதோ அது, சுரங்க நடவடிக்கைகளில் நீண்டகால நிலைத்தன்மை மற்றும் நிலையான முன்னேற்றங்களை உறுதி செய்யும்.

மேலாண்மை அலுவலர்களை ஈடுபடுத்துவதற்கான நிலக்கரி அமைச்சகத்தின் உத்தி, இந்தியாவின் நிலக்கரி சுரங்கத் துறையை நவீனமயமாக்குவதில் ஒரு குறிப்பிடத்தக்க செயல்பாடாகும். புகழ்பெற்ற எம்.டி.ஓக்களின் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதன் மூலம், நிலக்கரி உற்பத்தி திறன்களை மேம்படுத்துதல், செயல்பாட்டு செயல்திறனை மேம்படுத்துதல் நிலக்கரி இறக்குமதியை நம்பியிருப்பதைக் குறைத்தல், இறுதியில் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதை இந்திய நிலக்கரி நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

***

(Release ID: 2044824)

SMB/AG/RR



(Release ID: 2044863) Visitor Counter : 42