நிலக்கரி அமைச்சகம்

நிலக்கரியில் இருந்து செயற்கை இயற்கை எரிவாயு ஆலை அமைப்பதற்கான கூட்டு முயற்சியில் சிஐஎல் & கெயில் கையெழுத்திட்டன

Posted On: 06 AUG 2024 12:58PM by PIB Chennai

நிலக்கரி அமைச்சகம், மின்சாரம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்துடன் இணைந்து, இரண்டு முன்னணி மகாரத்னா பொதுத்துறை நிறுவனங்களான கோல் இந்தியா லிமிடெட் (சிஐஎல்) மற்றும் கெயில் (இந்தியா) லிமிடெட் இடையே, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டு முயற்சி ஒப்பந்தம் இன்று (05.08.2024). இந்த ஒப்பந்தம் மேற்பரப்பு நிலக்கரி வாயுமயமாக்கல் (SCG) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிலக்கரியிலிருந்து செயற்கை இயற்கை எரிவாயு (SNG) எடுக்கும் ஆலையை அமைப்பதற்கான முக்கிய நடவடிக்கையைக் குறிக்கிறது.

மேற்கு வங்கத்தில் உள்ள ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ராணிகஞ்ச் பகுதியில் அமையவுள்ள இந்த ஆலை, ஒரு மணி நேரத்திற்கு 80,000 என்எம்3 செயற்கை இயற்கை எரிவாயுவை (எஸ்.என்.ஜி) உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. ஆண்டு உற்பத்தி ஒரு மணி நேரத்திற்கு 633.6  மில்லியன் என்எம்3ஆக திட்டமிடப்பட்டுள்ளது.  இதற்கு 9 மில்லியன் டன் நிலக்கரி. தேவைப்படும். இதற்கான நிலக்கரியை கோல் இந்தியா நிறுவனம் சப்ளை செய்யும்.நிலக்கரியின் வேதியியல் பண்புகளைப் பயன்படுத்த உதவும் தேசிய நிலக்கரி வாயுமயமாக்கல் இயக்கத்தை நோக்கிய இரண்டு பெருநிறுவனங்களின் ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மை ஒரு பெரிய நடவடிக்கையாகும்.

செயற்கை இயற்கை வாயு (SNG) என்பது ஒரு எரிபொருள் வாயு ஆகும், இது முக்கியமாக மீத்தேன், CH4-ஐ உள்ளடக்கியது, இது பல்வேறு இரசாயனங்கள் மற்றும் உரங்களை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருளாகும்.வரவிருக்கும் ஆலை மூலப்பொருளைப் பாதுகாக்கவும், இயற்கை எரிவாயுவின் இறக்குமதி சார்பு நிலையைக் குறைக்கவும், தற்சார்பு இயக்கத்தை ஊக்குவிக்கவும் உதவும்.

திரு.டெபாசிஷ் நந்தா, இயக்குநர் (வணிக மேம்பாடு) கோல் இந்தியா மற்றும் கெயில் நிறுவனத்தின் வர்த்தக மேம்பாட்டு இயக்குநர் திரு ஆர்.கே.சிங்கால் இந்த கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

கையெழுத்திடும் நிகழ்ச்சியில் பேசிய திரு எம் நாகராஜு நிலக்கரித் துறையின் கூடுதல் செயலாளர், இந்தத் திட்டத்தில் கோல் இந்தியா நிறுவனம் மற்றும் கெயில் ஆகியவற்றின் அர்ப்பணிப்பு ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்றார். "நிலக்கரி அமைச்சகத்தின் மிக உயர்ந்த முன்னுரிமை பகுதி எரிவாயுமயமாக்கல் ஆகும். இந்தியாவில் ஏராளமான நிலக்கரி வளம் உள்ளது. இந்த இருப்புக்களை லாபகரமானதாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலும் பயன்படுத்த வேண்டும். கார்பன் உமிழ்வைக் குறைக்க, நிலக்கரி வாயுமயமாக்கல் திட்டங்களை அதிகளவில் திட்டமிடப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். சாத்தியமான இடைவெளி நிதிக்கான, நிதி ஆதரவு உட்பட அரசாங்கத்திடமிருந்து சாத்தியமான அனைத்து ஆதரவும் உள்ளது என்றும் அவர் கூறினார். நிலக்கரி/பழுப்பு நிலக்கரியை வாயுவாக்கும் திட்டத்திற்காக மூன்று பிரிவுகளின் கீழ் ரூ.8,500 கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்த தகுதியான ஒப்பந்ததாரர்களை (பொது மற்றும் தனியார்) வரவேற்க முன்மொழிவுகளுக்கான கோரிக்கை (RFPs) 15.05.2024 விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 11.11.2024 ஆகும்.

திரு எஸ் கே குப்தா (தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்), கெயில், கோல் இந்தியா மற்றும் கெயில் ஆகியவற்றின் குழுவினரை பாராட்டுகையில், இந்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அரசின் ஆதரவை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்தினார்.

நாட்டின் உமிழ்வு இலக்கை பூர்த்தி செய்யும் வகையில், நிலக்கரி வாயுமயமாக்கல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த முயற்சிகளுக்கு, நிலக்கரியை மாற்றாக பயன்படுத்துவது குறித்து எதிர்காலத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று மத்திய எரிசக்தி அமைச்சகம் மற்றும் இயற்கை எரிவாயு துறை செயலாளர் பங்கஜ் ஜெயின் கூறினார். எஸ்சிஜி என்பது நிலக்கரியை மதிப்புமிக்க சின் வாயுவாக மாற்றும் ஒரு நம்பிக்கைக்குரிய தொழில்நுட்பம் என்றும் அவர் குறிப்பிட்டார். தனை மேலும் செயல்பாட்டுக்கு உட்படுத்தும் போது செயற்கை இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்கிறது, இது மாற்று இயற்கை எரிவாயுவாக பயன்படுத்தப்படலாம். தற்போது இறக்குமதி செய்யப்படும் கீழ்நிலை இரசாயன உற்பத்திக்கும், மின் உற்பத்திக்கும் இது மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

சுருக்கமாக, கோல் இந்தியா நிறுவனத்தின் BD இயக்குநர் திரு தேபாசிஷ் நந்தா பேசுகையில், ஆலையின் விரிவான சாத்தியக்கூறு அறிக்கையைத் தயாரிப்பதற்கான பணிகளை ஒப்படைத்துள்ள M/s Projects and Development India Limited நிறுவனத்திற்கு முன்னுரிமை அடிப்படையில் திட்டத்தை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கினார்.இந்த கையெழுத்திடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலக்கரி அமைச்சகம், மின்சாரம் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனங்களின் அதிகாரிகள், கோல் இந்தியா, கெயில் மற்றும் பிடிஐஎல் ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

***

(Release ID: 2042019)

MM/AG/KR



(Release ID: 2042091) Visitor Counter : 30