சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மின் கழிவுகளை மறுசுழற்சி செய்தல்

Posted On: 01 AUG 2024 1:02PM by PIB Chennai

மின்னணுக் கழிவுகள் முறைசாராத் துறையில் கையாளப்படுவதால்,  அதுகுறித்த எந்த மதிப்பீடும் அரசிடம் இல்லை. இருப்பினும், நாட்டின் மின்-கழிவு மறுசுழற்சி துறையை முறைப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மின்-கழிவு (மேலாண்மை) விதிகள், 2016, சம்பந்தப்பட்ட மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள், மாசு கட்டுப்பாட்டுக் குழுக்களிடமிருந்து அகற்றுதல் மற்றும் மறுசுழற்சி அலகுகளுக்கு கட்டாய அங்கீகாரம் அளிக்கிறது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மின் கழிவுகளைக் கையாளுவதற்காக வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உதவியுடன் மறுசுழற்சி தொழிற்துறையை நவீனமயமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1974 மற்றும் காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1981 ஆகியவற்றின் பிரிவு 18 (1) (பி) இன் கீழ் அனைத்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்கும் முறைசாரா மின்-கழிவு நடவடிக்கைகளை சரிபார்க்கவும், மின்-கழிவுகளை அங்கீகரிக்கப்பட்ட அகற்றுபவர்கள்/மறுசுழற்சி செய்பவர்களை சரிபார்க்கவும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

முறைசாரா துறையில் மின்-கழிவு கையாளுவதை சரிபார்க்க வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அவ்வப்போது அறிவுறுத்தியுள்ளது. இயக்கங்களை மேற்கொள்வதற்கான குழுக்களை அமைத்தல், அறிவிப்புகளை வெளியிடுதல், செயல்பாட்டை மூடுதல், முறைசாரா செயலாக்கத்திற்கு எதிராக மின் கழிவுகளை பறிமுதல் செய்தல் போன்ற நடவடிக்கைகள் அந்தந்த மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களால் எடுக்கப்படுகின்றன. அமைச்சகம் மின்-கழிவு (மேலாண்மை) விதிகள், 2016 விரிவாக திருத்தியுள்ளது மற்றும் மின்-கழிவு (மேலாண்மை) விதிகள், 2022 நவம்பர், 2022 இல் அறிவித்தது, இது 2023 ஏப்ரல் 1 முதல் நடைமுறையில் உள்ளது. இந்த புதிய விதிகள் சுற்றுச்சூழல் ரீதியாக சிறந்த முறையில் மின் கழிவுகளை நிர்வகிப்பதையும், மின்-கழிவு மறுசுழற்சிக்கான மேம்பட்ட விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு (. பி. ஆர்) ஆட்சியை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன, இதில் அனைத்து உற்பத்தியாளர், புதுப்பித்தல் மற்றும் மறுசுழற்சி செய்பவர்கள் சிபிசிபி உருவாக்கிய போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும்.

மின் கழிவுகளை அகற்றுவதிலும் மறுசுழற்சி செய்வதிலும் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் அங்கீகாரம் மற்றும் பதிவு, திறன் மேம்பாடு, கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கும் மின்-கழிவு (மேலாண்மை) விதிகள் வழங்குகின்றன.

இந்தத் தகவலை சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

* * * * *

(Release ID: 2040028)

PKV/KV/KR


(Release ID: 2040142)
Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP