பாதுகாப்பு அமைச்சகம்
உத்தரப் பிரதேச பாதுகாப்பு தொழில் வழித்தடத்தின் கீழ் ஆளில்லா வான்வழி அமைப்பு, தகவல் தொடர்பு வசதிகளை அமைக்க பாதுகாப்பு அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது
प्रविष्टि तिथि:
30 JUL 2024 4:08PM by PIB Chennai
பாதுகாப்பு அமைச்சகம், ஜூலை 30, 2024 அன்று, உத்தரபிரதேச பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத்தின் கீழ் மூன்று அதிநவீன சோதனை வசதிகளை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், லக்னோவில் மெக்கானிக்கல் மற்றும் மெட்டீரியல் களத்தில் ஒரு வசதியும், கான்பூரில் இரண்டு வசதிகளும் – ஆளில்லா வான்வழி அமைப்பு மற்றும் தகவல் தொடர்பு களங்களில் தலா ஒன்று அமைக்கப்படும். பாதுகாப்பு சோதனை உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் புரிந்துணர்வு ஒப்பந்தம், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் புதுதில்லியில் உள்ள உத்தரபிரதேச அதிவேக நெடுஞ்சாலை தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்தின் மூத்த அதிகாரிகளிடையே பரிமாறிக் கொள்ளப்பட்டது.
தனியார் தொழில் மற்றும் மத்திய / மாநில அரசுடன் இணைந்து அதிநவீன சோதனை வசதிகளை அமைப்பதற்கும், உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும், இறக்குமதியைக் குறைப்பதற்கும், தற்சார்பை மேம்படுத்துவதற்கும் ரூ .400 கோடி செலவில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் 2020 மே மாதம் இதனைத் தொடங்கி வைத்தார். பாதுகாப்பு தொழில்துறை வழித்தடங்களுக்குள் பாதுகாப்பு மற்றும் விண்வெளி துறைகளுக்கு உத்வேகம் அளிக்க, தமிழ்நாட்டில் நான்கு மற்றும் உத்தரபிரதேசத்தில் மூன்று என ஏழு சோதனை மையங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மூன்று சோதனை வசதிகளை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்திடப்பட்ட நிலையில், சென்னையில் யுஏஎஸ், மின்னணு போர் மற்றும் எலக்ட்ரோ ஆப்டிக்ஸ் ஆகிய களங்களில் தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை தாழ்வாரத்தின் கீழ் மூன்று வசதிகளை அமைப்பதற்கான ஒப்பந்தம் ஜூலை 02, 2024 அன்று கையெழுத்தானது.
திட்டம் முடிந்ததும், இந்த வசதிகள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு மேம்பட்ட சோதனை உபகரணங்கள் மற்றும் சேவைகளை வழங்கும், சோதனை திறன்கள் மற்றும் செயல்முறைகளை மேம்படுத்த வருவாய் மறுமுதலீடு செய்யப்படும், இதன் மூலம் பாதுகாப்பில் தற்சார்புக்கு ஊக்கமளிக்கும்.
***
PKV/RR/BR/DL
(रिलीज़ आईडी: 2039863)
आगंतुक पटल : 86