பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வெளிநாட்டில் பயிலும் பழங்குடியின மாணவர்களுக்கான தேசிய கல்வி உதவித்தொகை

Posted On: 31 JUL 2024 2:55PM by PIB Chennai

வெளிநாட்டில் கல்வி பயில்வதற்கு பழங்குடியின மாணவர்களை தேர்வு செய்யும் பணி ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்ட பழங்குடியின மாணவர்களின் பட்டியலை, மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில், பழங்குடியின விவகாரத்துறை இணையமைச்சர் திரு துர்காதாஸ் உய்கே வெளியிட்டுள்ளார்.

2021-22-ம் ஆண்டு பழங்குடியினருக்கு கல்வி  உதவித் தொகை வழங்க ரூ.4.95 கோடியும், 2022-23-ம் ஆண்டில் ரூ.4 கோடியும், 2023-24-ம் ஆண்டு ரூ.7 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி தமிழ்நாட்டிலிருந்து 2023-24-ம் ஆண்டில் ஒரேயொரு மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

***

PKV/RR/KR/DL


(Release ID: 2039847)