பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
இ-கிராமஸ்வராஜ் – அரசு மின்னணு சந்தை
Posted On:
30 JUL 2024 4:42PM by PIB Chennai
தற்போது, 94,712 கிராம பஞ்சாயத்துகள் இ-கிராமஸ்வராஜ் – அரசு மின்னணு சந்தை இடைமுகத்தில் இணைந்துள்ளன, மேலும் 18,863 கிராம பஞ்சாயத்துகள் இந்த ஒருங்கிணைந்த இடைமுகத்தின் மூலம் ரூ. 291 கோடி மதிப்பில் கொள்முதல் செய்துள்ளன.
பஞ்சாயத்துகளால் பொருட்கள் மற்றும் சேவைகளைக் கொள்முதல் செய்வதற்காக அரசு மின்னணு சந்தைதளத்தை இ-கிராமஸ்வராஜ் உடன் ஒருங்கிணைக்கும் திட்டம் ஏப்ரல் 24, 2023 முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கிராம பஞ்சாயத்துகள் இந்த இடைமுகத்தில் இணைந்து வருகின்றன.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய பஞ்சாயத்து ராஜ் துறை இணையமைச்சர் பேராசிரியர் எஸ்.பி. சிங் பாகேல் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
(Release ID: 2039460)
Visitor Counter : 3