கனரகத் தொழில்கள் அமைச்சகம்
மின்சார வாகனங்களை ஊக்குவித்தல்
Posted On:
30 JUL 2024 3:54PM by PIB Chennai
நாட்டில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்க கனரக தொழில்கள் அமைச்சகம் தற்போது பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மின்சார மொபிலிட்டி ஊக்குவிப்பு திட்டம், ஆட்டோமொபைல் மற்றும் வாகன உதிரிபாகத் தொழிலுக்கான உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்குவிப்புத் திட்டம் உள்ளிட்டவை அதில் அடங்கும்.
உலகளாவிய மின்சார வாகன உற்பத்தியாளர்களிடமிருந்து முதலீடுகளை ஈர்ப்பதற்கும், மின்னணு வாகனங்களுக்கான உற்பத்தி மையமாக இந்தியாவை மேம்படுத்துவதற்கும் இந்தியாவில் மின்சார பயணிகள் வாகனங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மேலும், நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க கீழ்க்காணும் முன்முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
- மின்சார வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜர்கள் / சார்ஜிங் நிலையங்கள் மீதான ஜிஎஸ்டி 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
- பேட்டரியால் இயங்கும் வாகனங்களுக்கு பச்சை உரிமத் தகடுகள் வழங்கப்படும் என்றும் அனுமதித் தேவைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது.
- மின்சார வாகனங்களுக்கான சாலை வரியை தள்ளுபடி செய்ய மாநிலங்களுக்கு அறிவுறுத்தும் அறிவிப்பை வெளியிட்டது, இது மின்சார வாகனங்களின் ஆரம்ப செலவைக் குறைக்க உதவும்.
2015 முதல், இந்தியாவில் மின்சார மற்றும் கலப்பின வாகனங்களை விரைவாக ஏற்றுக்கொள்வதற்கும் உற்பத்தி செய்வதற்கும் திட்டத்தின் கட்டம்-1 மற்றும் கட்டம்-2 இன் கீழ் மின்சார வாகனம் வாங்குபவர்களுக்கு மத்திய அரசு மானியங்களை வழங்கி வருகிறது. மின்சார மொபிலிட்டி ஊக்குவிப்பு திட்டம் - 2024 இன் கீழ், மின்சார வாகனங்களின் முன்கூட்டிய கொள்முதல் விலையைக் குறைப்பதன் வடிவத்தில் e-2W மற்றும் e-3W வாங்குபவர்களுக்கு ஊக்கத்தொகை / மானியம் வழங்கப்படுகிறது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கனரக தொழில்கள் மற்றும் எஃகுத் துறை இணையமைச்சர் திரு பூபதி ராஜு சீனிவாச வர்மா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
(Release ID: 2039009)
PKV/RR/KR
(Release ID: 2039100)
Visitor Counter : 89