சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள்

Posted On: 30 JUL 2024 3:20PM by PIB Chennai

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது:

ஒருங்கிணைந்த மூத்த குடிமக்கள் திட்டத்தின்கீழ் அரசு சாரா / தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு முதியோர் இல்லங்கள், தொடர் பராமரிப்பு இல்லங்கள் போன்றவற்றை நடத்துவதற்கும், பராமரிப்பதற்கும் மானியம் வழங்கப்படுகிறது. ஏழ்மையில் உள்ள மூத்த குடிமக்களுக்கு உறைவிடம், ஊட்டச்சத்து, மருத்துவ சேவை மற்றும் பொழுதுபோக்கு போன்ற வசதிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

மூத்த குடிமக்களுக்கான மாநில செயல் திட்டத்தின்கீழ் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கண்புரை அறுவை சிகிச்சை மற்றும் மாநிலங்களின் குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.

தேசிய முதியோர் திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மூத்த குடிமக்கள் அல்லது மாத வருமானம் ரூ.15,000/-க்கு மிகாமல் உள்ள மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் தேவையான உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.

எல்டர்லைன் மூத்த குடிமக்களுக்கான தேசிய உதவி எண் திட்டத்தின் கீழ் குறைகளை பதிவு செய்தல், குறைகளை களைதல் மற்றும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் செயல்திறனை கண்காணித்தல் ஆகியவை மூத்த குடிமக்களுக்கான எல்டர்லைன் (elderline.dosje.gov.in) இணையதளம் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர்
திரு பி எல் வர்மா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2038976

***

IR/AG/KR



(Release ID: 2039056) Visitor Counter : 70