பாதுகாப்பு அமைச்சகம்
டிஆர்டிஓ பவனுக்கு பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் வருகை
Posted On:
24 JUL 2024 5:43PM by PIB Chennai
பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு. சஞ்சய் சேத், ஜூலை 24 ஆம் தேதி புது தில்லியில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) பவனுக்குச் சென்றார்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவின் செயலரும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) தலைவருமான டாக்டர் சமீர் வி காமத் அவருக்கு சமீபத்திய சாதனைகள், தற்போது நடைபெற்று வரும் முக்கியமான திட்டங்கள், எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். டிஆர்டிஓ உருவாக்கிய அதிநவீன நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் ஆயுதப் படை அமைப்புகள் பயன்படுத்தும் சாதனங்கள் குறித்து அவருக்கு விளக்கப்பட்டது.
செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ், சைபர் பாதுகாப்பு, ஆளில்லா விமானங்கள், இரட்டை பயன்பாட்டு தொழில்நுட்பம் உள்ளிட்ட நவீன ஏற்பாடுகள் உள்ளிட்ட தீவிரமான தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்த தனியார், தொழில்துறை, சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு மேற்கொண்டுள்ள ஒத்துழைப்புகள் குறித்தும் பாதுகாப்புத்துறை இணையமைச்சருக்கு விளக்கப்பட்டது.
அமைச்சர் சஞ்சய் சேத் தனது உரையில், நாட்டை தன்னிறைவு பெறச் செய்வதில் டிஆர்டிஓ விஞ்ஞானிகள் ஆற்றிவரும் அர்ப்பணிப்பு மிக்க பணியை பாராட்டினார்.
*****
VK/DL
(Release ID: 2037911)
Visitor Counter : 21