பாதுகாப்பு அமைச்சகம்

கடற்படை பாடசாலைகளுக்கான ஒருங்கிணைந்த நிறுவன வள திட்டமிடல் (ஈஆர்பி) மற்றும் வலைத்தளங்களின் அறிமுகம்

Posted On: 26 JUL 2024 5:15PM by PIB Chennai

கடற்படை பள்ளிகளுக்கான ஒருங்கிணைந்த நிறுவன வள திட்டமிடல் (ஈஆர்பி), வலைத்தளங்களை கமாடோர் (கடற்படை கல்வி), கடற்படை கல்வி சங்கத்தின் துணைத் தலைவர் கமாண்டர் ஜி ராம்பாபு 2024  ஜூலை 25 அன்று தில்லி கடற்படை சிறார்கள் பள்ளியில் நடத்தப்பட்ட ஆன்லைன் விழாவில் தொடங்கிவைத்தார். கடற்படை கல்வி அதிகாரிகள், கடற்படை பள்ளிகளின் மூத்த தலைவர்கள், ஜெனிபர் சாப்ட்டெக் நிறுவனத்தின் பிரதிநிதிகள் விழாவில் கலந்து கொண்டனர்.

 மேம்படுத்தப்பட்ட ஈஆர்பி பயன்பாட்டையும், வலைத்தளங்களின், செயல்முறைகளையும் தரப்படுத்துதல் மற்றும் தரவு நிர்வாகத்தை மையப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, தில்லி, விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை சிறார்கள் பள்ளிகளுக்கு முன்னோட்டத் திட்டமாக இது செயல்படுத்தப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2037583

***

SMB/AG/DL



(Release ID: 2037739) Visitor Counter : 46


Read this release in: English , Urdu , Hindi