கனரகத் தொழில்கள் அமைச்சகம்

இந்தியாவில் மின்சாரக் கார்கள் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள்

Posted On: 26 JUL 2024 3:40PM by PIB Chennai

மின்சார வாகனங்கள் உற்பத்தியில் உலகளாவிய முதலீட்டை ஈர்க்கவும், இந்தியாவில் அவற்றின் உற்பத்தியை அதிகரிக்கவும் மத்திய கனரகத் தொழில்கள் அமைச்சகம் 15.03.2024 அன்று ‘இந்தியாவில் மின்சாரக் கார்கள் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை’ அறிவித்தது.

இதற்கான முதலாவது ஆலோசனை கூட்டம் 18.04.2024 அன்று நடத்தப்பட்டது. இதில் முதன்மையான மூலசாதன உற்பத்தியாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்தத் தகவலை மத்திய எஃகு, கனரகத் தொழில்கள் துறை இணையமைச்சர் திரு பூபதி ராஜூ சீனிவாச வர்மா இன்று மாநிலங்களவையில் எழுத்துமூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.

***

SMB/AG/DL



(Release ID: 2037679) Visitor Counter : 20


Read this release in: English , Urdu , Hindi , Kannada