பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

70 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வந்த குடியுரிமையை வழங்கியதற்காக, மேற்கு பாகிஸ்தான் அகதிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கும், அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்

Posted On: 18 JUL 2024 6:44PM by PIB Chennai

மேற்கு பாகிஸ்தான் அகதிகள் சங்க தலைவர் திரு லாபா ராம் காந்தி, புதுதில்லியில் இன்று (18.07.2024) பிரதமர் அலுவலக இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியாவில் கடந்த 70 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வந்த குடியுரிமையை வழங்கியதற்காக, பிரதமர் திரு நரேந்திர மோடிக்கும், மத்திய அரசுக்கும் மேற்கு பாகிஸ்தான் அகதிகள் சார்பில் இதயப்பூர்வ நன்றியை தெரிவித்தனர். தாங்கள் இடம் பெயர்ந்து வந்து துயரமான காலகட்டத்தில் இருந்த போது தங்களுக்கு உறுதியான ஆதரவையும், உதவிகளையும் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு வழங்கியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தங்கள் மீது காட்டிய இரக்கம் மற்றும் இந்திய சமூகத்தில் தங்களை இணைத்து தங்களது நலனை உறுதிசெய்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2034086

***

MM/AG/DL



(Release ID: 2034116) Visitor Counter : 15


Read this release in: English , Urdu , Hindi