அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்) – மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் (சி.ஆர்.ஆர்.ஐ) தனது 73 வது நிறுவன தினத்தைக் கொண்டாடியது

Posted On: 16 JUL 2024 8:36PM by PIB Chennai

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்)-மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் (சி.ஆர்.ஆர்.ஐ) தனது 73-வது நிறுவன தினத்தை புதுதில்லியில் உள்ள அதன் வளாகத்தில் கொண்டாடியது.

சி.எஸ்.ஐ.ஆர் அமைப்பின் 26 வது தலைமை இயக்குநரும், அமைப்பின் 80 ஆண்டுகால வரலாற்றில் அதற்குத் தலைமை தாங்கும் முதல் பெண்மணியுமான டாக்டர்  என்.கலைச்செல்வி 'ஏ.சி.எஸ்.ஐ.ஆர் பி.ஹெச்.டி அறிஞர் ஆய்வகத்தை' திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் சி.ஆர்.ஆர்.ஐ.யின் உள்ளூர், மனித மற்றும் தொழில்நுட்ப நன்மைகளைப் பயன்படுத்தி இந்தியாவின் எதிர்கால சவால்களுக்கான கொள்கையை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார். தனியார் மற்றும் முன்னாள் மாணவர்களின் ஒத்துழைப்பு தேவை என்பதை அவர் வலியுறுத்தினார்.

சி.ஆர்.ஆர்.ஐ.யின் இயக்குநர் பேராசிரியர் மனோரஞ்சன் பரிதா பேசுகையில், மாட்டு வண்டி தொழில்நுட்பத்தில் தொடங்கி, உயிரி இணைப்பு, விரிவான போக்குவரத்து மற்றும் போக்குவரத்து திட்டமிடல், ஐ.ஆர்.ஏ.எஸ்.டி.இ., கழிவிலிருந்து செல்வம், வாகன எரிபொருள் கொள்கை வரை பல்வேறு பிரிவுகளின் செயல்பாடுகளில் சி.எஸ்.ஐ.ஆர்-சி.ஆர்.ஆர்.ஐ-இன் பங்களிப்பை விவரித்தார்.

73-வது நிறுவன தினக் கொண்டாட்டம், அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கும், சாலை மற்றும் போக்குவரத்து ஆராய்ச்சித் துறையில் அடுத்த தலைமுறை விஞ்ஞானிகளை ஊக்குவிப்பதற்கும் ஒரு தளமாக செயல்பட்டது. 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2033757

**********************

PLM/BR/KV



(Release ID: 2033875) Visitor Counter : 7


Read this release in: English , Urdu , Hindi