கூட்டுறவு அமைச்சகம்

குஜராத் மாநிலம் காந்தி நகரில் 102-வது சர்வதேச கூட்டுறவு தினத்தையொட்டி நடைபெறும் ஒத்துழைப்பு மூலம் செழிப்பு மாநாட்டில் மத்திய உள்துறை,கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்ற உள்ளார்

Posted On: 04 JUL 2024 6:00PM by PIB Chennai

குஜராத் மாநிலம் காந்தி நகரில் 102-வது சர்வதேச  கூட்டுறவு தினத்தையொட்டி நடைபெறும் ஒத்துழைப்பு மூலம் செழிப்பு மாநாட்டில் மத்திய உள்துறை, கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா  2024, ஜூலை 6 அன்று உரையாற்ற உள்ளார். 

இம்மாநாட்டில், 2024- 25-ம் நிதியாண்டுக்கான ஏஜிஆர்-2 திட்டத்தின் கீழ், விவசாயிகள் கொள்முதல் செய்யும் நானோ உரத்திற்கு 50 சதவீத நிதியுதவி அளிக்கும் திட்டத்தை அவர் தொடங்கிவைக்க உள்ளார். அந்நிகழ்ச்சியிலேயே மூன்று விவசாயிகளுக்கு அந்த நிதியை அவர் வழங்கவுள்ளார். தேசிய கூட்டுறவு இயற்கை தானிய உணவு நிறுவனம் தயாரிக்கும் ‘பாரத் இயற்கை தானிய உணவை அவர் அறிமுகப்படுத்தவுள்ளார்.

சனிக்கிழமையன்று பனஸ்கந்தாவில் உள்ள சங்தா பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்திற்கும் திரு அமித் ஷா செல்ல உள்ளார். சிறிய ஏடிஎம்களில்  ரூபே வேளாண் கடன் அட்டை  வாயிலாக பால் உற்பத்தியாளர்கள் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளை அவர் ஆய்வு செய்ய உள்ளார்.  அத்துடன் பனஸ்கந்தாவில்  பெண் கூட்டுறவு உறுப்பினர்களுக்கு வட்டியில்லாமல், ரூபே வேளாண் கடன் அட்டையை மத்திய கூட்டுறுவுத் துறை அமைச்சர் வழங்கவுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2030797

***

SMB/IR/RS/DL



(Release ID: 2030854) Visitor Counter : 7