மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

செயற்கை நுண்ணறிவு குறித்த உலகளாவிய கூட்டாண்மை அமைச்சர்கள் குழுவின் 6வது கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது

Posted On: 03 JUL 2024 8:32PM by PIB Chennai

செயற்கை நுண்ணறிவு குறித்த உலகளாவிய கூட்டாண்மை (ஜி.பி.ஏ.ஐ)  அமைச்சர்கள் குழுவின் 6வது கூட்டம் ஜூலை  3, 2024 அன்று புதுதில்லியின் பாரத மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் திரு. ஜிதின் பிரசாதா தலைமை தாங்கினார். ஜப்பான் துணை அமைச்சர் திரு ஹிரோஷி யோஷிடா மற்றும் செர்பியாவின் அமைச்சர் திருமதி ஜெலினா பெகோவிக் ஆகியோரும் கூட்டத்தில் உரையாற்றினர். இந்தக் கூட்டத்தில் ஓ.இ.சி.டி-யின் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு இயக்குநர் திரு ஜெர்ரி ஷீஹன் மற்றும் யுனெஸ்கோவின் உதவி தலைமை இயக்குநர்  டாக்டர் தவ்பிக் ஜெலாசி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விரிவான விவாதங்களுக்குப் பிறகு, செயற்கை நுண்ணறிவு குறித்த உலகளாவிய கூட்டாண்மை  என்ற எதிர்காலத் தொலைநோக்கு குறித்து உறுப்பினர்கள் ஒருமித்த கருத்துக்கு வந்தனர். கூட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

நமது சமூகங்கள் மற்றும் பொருளாதாரங்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் செயற்கை நுண்ணறிவின் (ஏ.ஐ) உருமாறும் திறனை அங்கீகரித்தல், பாதுகாப்பான மற்றும் நம்பகமான ஏ.ஐ அமைப்புகள் நிலையான வளர்ச்சியை அடைவதை உறுதி செய்தல், ஏ.ஐ இன் நன்மைகளைப் பயன்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த சர்வதேச முயற்சிகளின் முக்கியத்துவம் ஆகியவை வலியுறுத்தப்பட்டன.

ஏ.ஐ அமைப்புகளால் ஏற்படும் அதிகரித்து வரும் அபாயங்கள் மற்றும் சவால்களுக்கு  முக்கியத்துவம் அளிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது. குறிப்பாக மேம்பட்ட ஏ.ஐ அமைப்புகள், பாதுகாப்பு மற்றும் சாத்தியமான தீங்கிழைக்கும் பயன்பாடுகள் உட்பட; தவறான மற்றும் முரணான தகவல்; பாகுபாட்டிற்கு வழிவகுக்கும் தீங்கு விளைவிக்கும் சார்புகள்; வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை இல்லாமை; அறிவுசார் சொத்துரிமை மற்றும் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புக்கான அபாயங்கள்; மனித உரிமைகள் மற்றும் குழந்தைகளின் நல்வாழ்வுக்கு அச்சுறுத்தல்கள்; சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கான அபாயங்கள்; நாடுகளுக்கு இடையேயும், நாடுகளுக்கு உள்ளேயும் டிஜிட்டல் பிளவுகளை விரிவுபடுத்துதல்; வேலையின் எதிர்காலத்தை மாற்றுவது ஆகியவை இதில் அடங்கும்.

செயற்கை நுண்ணறிவு குறித்த ஓ.இ.சி.டி பரிந்துரை மற்றும் செயற்கை நுண்ணறிவு நெறிமுறைகள் குறித்த யுனெஸ்கோவின் பரிந்துரை ஆகியவற்றில் கூட்டு உறுதிப்பாடு மீண்டும்  வலியுறுத்தப்பட்டது.

புதுதில்லி 2023 ஜி.பி.ஏ.ஐ அமைச்சர்கள் பிரகடனத்தை  அங்கீகரிப்பது, அதில் ஜி.பி.ஏ.ஐ இன் தனித்துவமான மற்றும் சுதந்திரமான அடையாளத்தை வலுப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை ஒரு முக்கிய முன்முயற்சியாக அறிவிக்கப்பட்டது, இது ஏ.ஐ கண்டுபிடிப்பு மற்றும் ஆளுகை குறித்த உலகளாவிய ஒத்துழைப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது; பகிரப்பட்ட மதிப்புகளின் அடிப்படையில் பரந்த அளவிலான நிபுணத்துவம், தேசிய மற்றும் பிராந்திய பார்வைகள் மற்றும் அனுபவங்களை உறுதி செய்வதற்காக, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் கவனம் செலுத்தி, மாறுபட்ட உறுப்பினர்களைப் பெறுவதற்கான உறுதிப்பாடு மீண்டும்  உறுதிப்படுத்தப்பட்டது.

2024 ஜி.பி.ஏ.ஐ புதுதில்லி கூட்டம் மற்றும் ஜி.பி.ஏ.ஐ இன் எதிர்காலம் குறித்து எட்டப்பட்ட ஒருமித்த கருத்து, உலகளாவிய ஏ.ஐ துறையில்  இந்தியாவின் தலைமையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, ஏ.ஐ-  இன் நெறிமுறை மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை வழிநடத்துவதில் அதன் முக்கியப் பங்கை உறுதிப்படுத்துகிறது.

***

(Release ID: 2030534)

PKV/BR/AG/RR



(Release ID: 2030604) Visitor Counter : 57