பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

அகவிலைப்படி விகிதங்கள் 50 சதவீதத்தை எட்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய பணிக்கொடை மற்றும் இறப்பு பணிக்கொடையின் அதிகபட்ச வரம்பை 20 லட்சத்திலிருந்து ரூ .25 லட்சமாக உயர்த்துவதற்கான அறிவுறுத்தல்களை ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை வெளியிட்டுள்ளது

Posted On: 01 JUN 2024 7:56PM by PIB Chennai

ஏழாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தும் வகையில், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை, 04.08.2016 தேதியிட்ட ஆணை எண்.38/37/2016-பி&பி.டபிள்யூ (ஏ) (i)-ன்படி, ஓய்வூதியம் / பணிக்கொடை / ஓய்வூதியத்தின் மொத்தத் தொகை / குடும்ப ஓய்வூதியம் / இயலாமை ஓய்வூதியம் / கருணைத் தொகை இழப்பீடு போன்றவற்றை ஒழுங்குபடுத்தும் விதிகளை மறுபரிசீலனை செய்வது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

ஏழாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் மீதான அரசின் முடிவுகளின்படி, அகவிலைப்படி விகிதங்கள் 50% ஆக எட்டும்போது ஓய்வூதிய பணிக்கொடை மற்றும் இறப்பு பணிக்கொடையின் அதிகபட்ச வரம்பு 25% அதாவது ரூ .20 லட்சத்திலிருந்து ரூ .25 லட்சமாக உயர்த்தப்படும்.

செலவினத் துறை, 12.03.2024 தேதியிட்ட OM எண் 1/1/2024-E-II(B) மூலம் அகவிலைப்படி விகிதங்களை தற்போதுள்ள 46% முதல் அடிப்படை ஊதியத்தில்  50% ஆக உயர்த்துவது குறித்து அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

அதன்படி, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலத்துறை, பங்குதாரர்களுடன் உரிய ஆலோசனைக்குப் பிறகு, 30.05.2024 தேதியிட்ட OM எண் 28/03/2024-P&PW (B)/GRATUITY/9559 மூலம் அறிவுறுத்தல்களை வெளியிட்டது, CCS (ஓய்வூதியம்) விதிகள், 2021 மற்றும் CCS (NPS இன் கீழ் பணிக்கொடை செலுத்துதல்) விதிகளின் கீழ் ஓய்வூதிய பணிக்கொடை மற்றும் இறப்பு பணிக்கொடையின் அதிகபட்ச வரம்பை ரூ .25 லட்சமாக உயர்த்தியது. இந்த உயர்வு  2024 ஜனவரி 1  முதல் அமலுக்கு எடுத்துக்  கொள்ளப்படும்.

ஓய்வூதியப் பணிக்கொடை மற்றும் இறப்புப் பணிக்கொடை ஆகியவை பணியாளர் கடைசியாகப் பெற்ற அடிப்படை ஊதியம் மற்றும் அவர் ஆற்றிய சேவையின் கால அளவைப் பொறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

***

ANU/SRI/PKV/KV



(Release ID: 2022507) Visitor Counter : 153