குடியரசுத் தலைவர் செயலகம்
குடியரசுத் தலைவர் ஏப்ரல் 23 முதல் 24 வரை உத்தராகண்ட் பயணம்
Posted On:
22 APR 2024 10:01PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு ஏப்ரல் 23 முதல் 24 வரை உத்தராகண்ட் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்.
ஏப்ரல் 23 ஆம் தேதி ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையின் 4-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார். அன்று மாலை ரிஷிகேஷில் நடைபெறும் கங்கா ஆரத்தியில் அவர் பங்கேற்கிறார்.
ஏப்ரல் 24 அன்று, டேராடூனில் உள்ள இந்திரா காந்தி தேசிய வன அகாடமியில் இந்திய வனப் பணி (2022 தொகுப்பு) பயிற்சி அதிகாரிகளின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார்.
***
(Release ID: 2018539)
PKV/AG/RR
(Release ID: 2018549)
Visitor Counter : 94