பாதுகாப்பு அமைச்சகம்

கூட்டு ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ராணுவ மருத்துவ சேவைகள் மற்றும் தில்லி ஐஐடி கையெழுத்திட்டுள்ளன

Posted On: 22 APR 2024 5:18PM by PIB Chennai

ராணுவ மருத்துவ சேவைகள் 2024 ஏப்ரல் 22 அன்று தில்லி இந்தியத் தொழில்நுட்ப கழகத்துடன் கூட்டு ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.  இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ராணுவ மருத்துவ சேவைகள் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் தல்ஜித் சிங், தில்லி ஐஐடி இயக்குநர் பேராசிரியர் ரங்கன் பானர்ஜி ஆகியோர் கையெழுத்திட்டனர். புதிய மருத்துவ சாதனங்களை உருவாக்குவதற்கான ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை மேற்கொள்வது, பல்வேறு நிலப்பரப்புகளில் பணியாற்றும் ராணுவ வீரர்களின் குறிப்பிட்ட சுகாதாரப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் கவனம் செலுத்துவது ஆகியவை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஆசிரியர்கள் பரிமாற்றத் திட்டம், கூட்டுக் கல்வி நடவடிக்கைகள் மற்றும் கூட்டு பிஎச்டி ஆய்வுகளை உருவாக்கவும் திட்டமிடப்படும்.

 ராணுவ வீரர்களுக்கு மிக உயர்ந்த மருத்துவ சேவையை வழங்க ஏஎஃப்எம்எஸ் உறுதிபூண்டுள்ளதாகவும், ஐ.ஐ.டி போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களுடன் ஒத்துழைப்பது இந்த உறுதிப்பாட்டை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும் என்றும் ராணுவ மருத்துவ சேவைகள் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் தல்ஜித் சிங் ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் தெரிவித்தார். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நாட்டிற்கும் ராணுவத்திற்கும் பயனளிக்கும் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான வாய்ப்புகள் நிறைந்தது என்று தில்லி ஐ.ஐ.டி இயக்குநர் பேராசிரியர் ரங்கன் பானர்ஜி தெரிவித்தார்.

***

SRI/SMB/AG/KPG/DL



(Release ID: 2018504) Visitor Counter : 49


Read this release in: English , Manipuri , Urdu , Hindi