குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் துணைத் தலைவர் மார்ச் 8-ம் தேதி பெங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் கோயம்புத்தூருக்கு பயணம் மேற்கொள்கிறார்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் செயற்கைக்கோள் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை மையத்தை குடியரசுத் துணைத் தலைவர் பார்வையிடுகிறார்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ராஜநாக விருது வழங்குகிறார் குடியரசுத் துணைத் தலைவர்

கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு குடியரசுத் துணைத் தலைவர் வருகை தருகிறார்

प्रविष्टि तिथि: 06 MAR 2024 12:31PM by PIB Chennai

குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், கர்நாடகா  மாநிலம் பெங்களூரு, கேரள மாநிலம் திருவனந்தபுரம், தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் ஆகிய இடங்களுக்கு  மார்ச் 8-ம் தேதி பயணம் மேற்கொள்கிறார்.

து ஒரு நாள் பயணத்தின் போது, குடியரசுத் துணைத் தலைவர் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ செயற்கைக்கோள் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை நிறுவனத்திற்குச் சென்று, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) அறிவியல் சமூகத்தினருடன் கலந்துரையாடுவார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் ராஜநாக விருது வழங்கும் விழாவில், திரு. தன்கர் தலைமை விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.

மகாசிவராத்திரி கொண்டாட்டங்களில் பங்கேற்க, கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கும் குடியரசுத் துணைத் தலைவர் செல்கிறார்.

***

(Release ID: 2011826)

PKV/AG/RR


(रिलीज़ आईडी: 2011835) आगंतुक पटल : 198
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali-TR , Punjabi , Gujarati , Malayalam