நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

2024-25 ரபி சந்தைப் பருவம் மற்றும் காரீப் சந்தைப் பருவம் (2023-24) ஆகியவற்றின் போது கொள்முதல் குறித்து விவாதிக்க மாநில உணவுத் துறை செயலாளர்களுடன் மத்திய அரசு சந்திப்பு

Posted On: 29 FEB 2024 9:40AM by PIB Chennai

இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை, 28.02.2024 அன்று புதுதில்லியில் மாநில உணவுத் துறை  செயலாளர்களின் கூட்டத்தை ஏற்பாடு செய்தது.  2024-25 ரபி சந்தைப்படுத்தல் பருவம் மற்றும் 2023-24 காரீப் சந்தைப்படுத்தல் பருவத்தில்,  ரபி பயிர்களுக்கான கொள்முதல் ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறைச் செயலாளர், கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
வானிலை முன்னறிவிப்பு, உற்பத்தி மதிப்பீடுகள் மற்றும் மாநிலங்களின் தயார்நிலை போன்ற கொள்முதலை பாதிக்கும் பல்வேறு காரணிகள் மதிப்பாய்வு செய்யப்பட்டன. விவாதங்களுக்குப் பிறகு, 2024-25  ரபி சந்தைப்படுத்தல் பருவத்தின் போது கோதுமை கொள்முதலுக்கான மதிப்பீடுகள் 300-320 லட்சம் மெட்ரிக் டன் வரம்பில் நிர்ணயிக்கப்பட்டன. இதேபோல், 2023-24 காரீப் சந்தைப்படுத்தல் பருவத்தில் (ராபி பயிர்) அரிசியின் அடிப்படையில் நெல் கொள்முதல் மதிப்பீடுகள் 90 - 100 லட்சம் மெட்ரிக் டன் வரம்பில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
2023-24 காரீப் சந்தைப்படுத்தல் பருவக் (ராபி பயிர்) காலத்தில் சுமார் 6.00 லட்சம் மெட்ரிக் டன் தானியங்கள் / சிறுதானியங்கள் (ஸ்ரீ அன்னா) கொள்முதல் செய்யப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பயிர்களை பன்முகப்படுத்துதல் மற்றும் உணவு முறைகளில் மேம்பட்ட ஊட்டச்சத்துக்காக சிறுதானியங்களை கொள்முதல் செய்வதில் கவனம் செலுத்துமாறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் அறிவுறுத்தப்பட்டன.
மேலும், விநியோகச் சங்கிலி மிகையாக்கல் தொடர்பாக பின்பற்றப்பட்ட நல்ல நடைமுறைகளை தெலங்கானா மாநில அரசு பகிர்ந்து கொண்டது. இந்திய அரசின் இந்த சுற்றுச்சூழலுக்கு உகந்த  முயற்சியின் மூலம் ஆண்டுக்கு ரூ 16 கோடி சேமிக்கப்பட்டுள்ளது. மின்னணு எடைபார்க்கும் கருவியுடன் இ-பி.ஓக்களை இணைப்பது தொடர்பான வெற்றிகரமான முன்முயற்சியை உத்தரப் பிரதேச அரசு பகிர்ந்து கொண்டது, இது பயனாளிகளுக்கு அவர்களின் உரிமை அளவுகளுக்கு ஏற்ப உணவு தானியங்கள் வழங்கப்படுவதை திறம்பட உறுதி செய்துள்ளது.
மாநில குறைந்தபட்ச ஆதரவு விலை கொள்முதல் விண்ணப்பங்களின் டிஜிட்டல் முதிர்ச்சி குறித்த மதிப்பீட்டு ஆய்வறிக்கையை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் சமர்ப்பித்தது. 2024-25  காரீப் சந்தைப்படுத்தல் காலம் தொடங்குவதற்கு முன்பு, கொள்முதல் முறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனைக் கொண்டுவருவதற்காக, அக்ரிஸ்டாக் தளத்தின் நிலையான மற்றும் முக்கிய அம்சங்களுக்கு ஏற்ப தங்கள் தற்போதைய பயன்பாடுகளை ஏற்றுக்கொள்ள அல்லது மேம்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்திய உணவுக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், மாநிலங்களின் முதன்மைச் செயலாளர்/செயலாளர்களுடன், இந்திய வானிலை ஆய்வுத் துறை, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை, இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு மற்றும் இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு  ஆகியவற்றின் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

***********

ANU/PKV/BR/AG/KRS

 

 



(Release ID: 2010009) Visitor Counter : 137