பாதுகாப்பு அமைச்சகம்

பிரெஞ்சு ராணுவ தலைமை தளபதி ஜெனரல் பியர் ஷில் இந்தியா வந்துள்ளார்

Posted On: 27 FEB 2024 5:10PM by PIB Chennai

பிரெஞ்சு ராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல் பியர் ஷில் 2024 பிப்ரவரி 27 முதல் 29 வரை இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று (27 பிப்ரவரி 2024) தேசிய போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அவர் அஞ்சலி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்துபுதுதில்லியில் உள்ள சவுத் பிளாக் புல்வெளியில் பிரெஞ்சு ராணுவத் தளபதிக்கு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே மற்றும் ஆயுதப்படைகளின் பிற மூத்த ராணுவ அதிகாரிகளைச் சந்தித்தார். இரு நாட்டு ராணுவங்களுக்கும் இடையே இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து அவர்கள் பேச்சு நடத்தினர்.   

தமது இந்தியப் பயணத்தின் போதுபிரெஞ்சு ராணுவ தலைமைத் தளபதிஇந்திய பாதுகாப்பு தொழில்துறை பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவுள்ளார். ராஜஸ்தானில் பினாகா துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை அவர்  பார்வையிடுவார். ஜெய்ப்பூரில் உள்ள சப்த சக்தி கட்டளைக்குச் செல்லும் அவர்அங்கு மூத்த ராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார். 29 பிப்ரவரி 2024 அன்றுஜெனரல் பியர் ஷில் மதிப்புமிக்க தேசிய பாதுகாப்பு கல்லூரியில் (NDC) அதிகாரிகளிடையே உரையாற்றுவார்.

ஜெனரல் பியர் ஷில்லின் இந்திய வருகைபாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத்துறை தொழில்நுட்பம் ஆகியவற்றில் பிரான்ஸ் மற்றும் இந்தியா இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த வாய்ப்பை ஏற்படுத்தும்.

*************

(Release ID: 2009438)

ANU/PKV/PLM/RS/KRS



(Release ID: 2009596) Visitor Counter : 84


Read this release in: English , Urdu , Hindi , Punjabi