தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஊதிய தரவு: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் டிசம்பர் 2023-ல் 15.62 லட்சம் நிகர உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர்

Posted On: 20 FEB 2024 4:10PM by PIB Chennai

2024 பிப்ரவரி 20, அன்று வெளியிடப்பட்ட தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் தற்காலிக ஊதியத் தரவின் படி, 2023 டிசம்பர் மாதத்தில் 15.62 லட்சம் நிகர உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

இது கடந்த மூன்று மாதங்களைவிட மிக அதிகம். 2023 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் டிசம்பர் மாதத்தில் 11.97% பேர் அதிகம் சேர்ந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஆண்டுக்கு ஆண்டு பகுப்பாய்வில் டிசம்பர் 2022-வுடன் ஒப்பிடும்போது நிகர உறுப்பினர் சேர்த்தல்களில் 4.62% வளர்ச்சி வெளிப்படுத்துகிறது. அதிகரித்த வேலைவாய்ப்புகள், பணியாளர் நன்மைகள் குறித்த வளர்ந்து வரும் விழிப்புணர்வு மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் பொதுத் தொடர்பு திட்டங்களின் செயல்திறன் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் உறுப்பினர் அதிகரிப்பு ஏற்படலாம்.

2023 டிசம்பரில் சுமார் 8.41 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர், இது முந்தைய மூன்று மாதங்களைவிட மிக அதிகம். முந்தைய நவம்பர் 2023 மாதத்துடன் ஒப்பிடும்போது புதிய உறுப்பினர்கள் சேர்க்கை 14.21% அதிகரிப்பைக் காட்டுகிறது. தரவுகளின் குறிப்பிடத்தக்க அம்சம் 18-25 வயதுக்குட்பட்டவர்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இது டிசம்பரில் சேர்க்கப்பட்ட மொத்த புதிய உறுப்பினர்களில் 57.18% ஆகும். இந்த புள்ளிவிவரம் ஒரு குறிப்பிடத்தக்க போக்கை சுட்டிக் காட்டுகிறது - ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர் தொகுப்பில் சேரும் பெரும்பாலான தனிநபர்கள் இளைஞர்களாக உள்ளனர். முதல் முறையாக பணியில் சேர்ந்துள்ளனர்.

ஏறக்குறைய 12.02 லட்சம் உறுப்பினர்கள் வெளியேறி பின்னர் மீண்டும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் சேர்ந்ததாக ஊதிய தரவு எடுத்துக்காட்டுகிறது. இந்த எண்ணிக்கை முந்தைய நவம்பர் 2023 மாதத்துடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க வகையில் 12.61% அதிகரிப்பைக் குறிக்கிறது மற்றும் கடந்த ஐந்து மாதங்களில் பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த தொகையாக உள்ளது. இந்த உறுப்பினர்கள் தங்கள் வேலைகளை மாற்றி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கீழ் உள்ள நிறுவனங்களில் மீண்டும் சேர்ந்தனர் மற்றும் இறுதி தீர்வுக்கு விண்ணப்பிப்பதற்குப் பதிலாக தங்கள் கணக்கை மட்டும் மாற்றி தொடர்வதை தேர்ந்தெடுத்துள்ளனர், இதனால் நீண்டகால நிதி நல்வாழ்வைப் பாதுகாத்து அவர்களின் சமூகப் பாதுகாப்பை நீட்டித்தனர்.

ஊதிய தரவுகளின் மாநில வாரியான பகுப்பாய்வின்படி, மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஹரியானா ஆகிய 5 மாநிலங்கள் நிகர உறுப்பினர் சேர்க்கை அதிகமாக இருப்பது வெளிப்படுகிறது.

***

ANU/AD/BS/AG/KRS/DL


(Release ID: 2007454)