மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

டெல்லியில் உள்ள ஐஐஐடி-யில் டிஜிட்டல் இந்தியா பியூச்சர் லேப்ஸை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் தொடங்கி வைத்தார்

Posted On: 03 FEB 2024 4:20PM by PIB Chennai

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் மற்றும் ஜல் சக்தி துறை இணை அமைச்சர் திரு  ராஜீவ் சந்திரசேகர் "டிஜிட்டல் இந்தியா ஃபியூச்சர்லேப்ஸ்" ஐ தொடங்கி வைத்து, 'டிஜிட்டல் இந்தியா ஃபியூச்சர்லேப்ஸ் உச்சி மாநாடு 2024' இல் முக்கிய உரையாற்றினார், இது 'டிஜிட்டல் இந்தியா ஃபியூச்சர்லேப்ஸ் மூலம் அடுத்த தலைமுறை மின்னணு அமைப்பு வடிவமைப்பை ஊக்குவித்தல்' என்பதை மையமாகக் கொண்டது.

இந்த உச்சிமாநாட்டில் ஃப்யூச்சர் லேப்ஸ் திட்டத்தை அமல்படுத்துவதற்காக தொழில் துறையுடன் 22 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட்டன. என்எக்ஸ்பி செமிகண்டக்டர்ஸ், டென்ஸ்டோரண்ட் மற்றும் குவால்காம் இந்தியா போன்ற நிறுவனங்கள் உயர் செயல்திறன் கம்ப்யூட்டிங் ஸ்பேஸ், கம்ப்யூட் ஸ்பேசில் வடிவமைப்பு மற்றும் கண்டுபிடிப்பு மற்றும் இந்திய டெலிகாம் ஸ்டேக் போன்ற துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.

இந்த மாநாட்டில் பங்கேற்ற முக்கிய தொழில்துறை நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள், இளம் இந்தியர்கள் மற்றும் மின்னணு உற்பத்தித் துறையைச் சேர்ந்த கல்வியாளர்கள் மத்தியில் மத்திய அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் உரையாற்றினார்.

திரு ராஜீவ் சந்திரசேகர் தனது உரையில், "கடந்த பத்து ஆண்டுகளில், இந்தியாவின் பயணம் தொழில்நுட்பங்களின் நுகர்வோர் மற்றும் உலகெங்கிலும் உள்ள பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு திறமைகளை வழங்குபவர் என்ற நிலையிலிருந்து திறமை நிச்சயமாக கிடைக்கும் நாடாக மாறியுள்ளது என்றார்.

நமது திறமைகளால் உலகளாவிய  நிறுவனங்களுக்கு நாம் தொடர்ந்து ஆதரவளிக்கிறோம், அதே நேரத்தில் நமக்கும் உலகிற்கும் தொழில்நுட்பங்கள், அறிவுசார் பண்புகள் மற்றும் தீர்வுகளை உருவாக்குவதில் முன்னிலை வகிக்கிறோம் என்றும் மத்திய அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் கூறினார்.

இந்தியாவின் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு சுற்றுச்சூழல் அமைப்பு விரிவடைந்து வளர்ந்து வருகிறது, அதே நேரத்தில் டிஜிட்டல் இந்தியா ஃபியூச்சர்லேப்ஸில் தொடங்கி செமிகண்டக்டர்கள், எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் டிசைன் மற்றும் இன்னோவேஷன் வரையிலான செயற்கை நுண்ணறிவு புத்தொழில் நிறுவனங்களின் அடுத்த அலையை ஊக்குவிக்கிறது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

டிஜிட்டல் இந்தியா ஃபியூச்சர் லேப்ஸ் என்பது 2015 ஆம் ஆண்டில் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்குப் பிறகு பிரதமர் திரு நரேந்திர மோடி உருவாக்கி வரும் கண்டுபிடிப்புகளுக்கான கட்டிடக்கலையின் இறுதி பகுதியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த தலைமுறை மின்னணு  வளர்ச்சியில் முன்னணியில் உள்ள இந்திய புத்தொழில் நிறுவனங்களுக்கு இது ஒரு வாய்ப்பாகும். டிஜிட்டல் இந்தியா ஃபியூச்சர்லேப்ஸ் இதற்கு ஒரு ஊக்கியாக செயல்படும், மேலும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் ஒவ்வொரு பிரிவிலும் இந்திய கொடியை உறுதி செய்வதற்கான எங்கள் லட்சியங்களை நிறைவு செய்யும் என்றும் மத்திய அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் கூறினார்.

----

 

ANU/PKV/BS/DL



(Release ID: 2002287) Visitor Counter : 68


Read this release in: English , Urdu , Hindi , Kannada