குடியரசுத் தலைவர் செயலகம்

மேகாலயா மற்றும் அசாம் மாநிலங்களுக்கு ஜனவரி 15 முதல் 17 வரை குடியரசுத்தலைவர் பயணம் மேற்கொள்கிறார்

Posted On: 14 JAN 2024 6:05PM by PIB Chennai

2024 ஜனவரி 15 முதல் 17 வரை மேகாலயா மற்றும் அசாம் மாநிலங்களுக்குக் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு பயணம் மேற்கொள்கிறார் .

ஜனவரி 15-ம் தேதி துராவில் உள்ள பி.ஏ.சங்மா ஸ்டேடியத்தில் மேகாலயா விளையாட்டுப் போட்டிகளைக்  குடியரசுத்தலைவர் தொடங்கி வைக்கிறார்.

ஜனவரி 16 ஆம் தேதி, துராவில் உள்ள பல்ஜெக் விமான நிலையத்தில் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும் குடியரசுத்தலைவர், துராவில் புதிய ஒருங்கிணைந்த நிர்வாக வளாகத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.  அதே நாளில், மாவ்ப்லாங்கில் ஒரு கூட்டத்தில் உரையாற்றும் அவர், மேம்படுத்தப்பட்ட ரோங்ஜெங் மங்சாங் அடோக்ரே சாலை மற்றும் மைராங் ராணிகோடவுன் அஸ்ரா சாலையை மெய்நிகர் முறையில் திறந்து வைப்பார்.  அத்துடன் ஷில்லாங் பீக் ரோப்வே மற்றும் கொங்தோங், மாவ்லிங்கோட் மற்றும் குடெங்ரிம் கிராமங்களில் சுற்றுலா தங்குமிடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மாலையில், ஷில்லாங்கில் உள்ள ராஜ்பவனில் மேகாலயா அரசு சார்பில் அளிக்கப்படும் வரவேற்பு நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் கலந்து கொள்கிறார்.

ஜனவரி 17 ஆம் தேதி, அசாமின் திபுவின் தரலாங்சோவில் நடைபெறும் கர்பி இளைஞர் திருவிழாவின் பொன்விழா கொண்டாட்டங்களில் குடியரசுத்தலைவர் கலந்து கொள்கிறார்.  

*****

ANU/AD/SMB/DL



(Release ID: 1996068) Visitor Counter : 103