குடியரசுத் தலைவர் செயலகம்

விளையாட்டு மற்றும் சாகச விருதுகள் 2023-ஐ குடியரசுத்தலைவர் வழங்கினார்

தமிழ்நாட்டின் ஆர்.பி ரமேஷ், ஆர்.வைஷாலி, கவிதா செல்வராஜ் ஆகியோர் விருது பெற்றனர்

Posted On: 09 JAN 2024 3:43PM by PIB Chennai

குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (09.01.2024) நடைபெற்ற விழாவில் 2023-ம் ஆண்டுக்கான விளையாட்டு மற்றும் சாகச விருதுகளை, குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு வழங்கினார்.  மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுகள், துரோணாச்சார்யா விருதுகள், அர்ஜூனா விருதுகள், தயான் சந்த் விருதுகள், டென்சிங் நோர்கே தேசிய சாகச விருதுகள், ராஷ்டிரிய கேல் புரோத்சஹான் புரஸ்கார், மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோப்பை ஆகியவற்றை குடியரசுத்தலைவர் வழங்கினார்.

சிராக் சந்திரசேகர ரெட்டி, சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி ஆகியோருக்கு தியான் சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.

செஸ் பயிற்சியாளர் ஆர்.பி ரமேஷ், கபடி பயிற்சியாளர் கேப்டன் பாஸ்கரன் உட்பட 8 பேருக்கு துரோணாச்சாரியா விருதினை குடியரசுத்தலைவர் வழங்கினார்.

செஸ் வீராங்கனை ஆர்.வைஷாலி உட்பட 26 பேருக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது. கபடி வீராங்கனை கவிதா செல்வராஜ் உட்பட 3 பேருக்கு தியான் சந்த் விருது வழங்கப்பட்டுள்ளது.

டென்சிங் நார்கே தேசிய சாசக விருது 2022, கவிதா கன்ஸ்வாலுக்கு மறைவுக்குப் பிந்தைய விருதாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் 3 பேருக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.

பஞ்சாபின் அமிர்தசரசில் உள்ள குருநானக் தேவ் பல்கலைக்கழகத்திற்கு மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோப்பை வழங்கப்பட்டது.

விருது பெற்றவர்களின் முழுமையான பட்டியலைக் கீழ்க்கண்ட இணையதள இணைப்பில் காணலாம்.

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2024/jan/doc202419297401.pdf

----

(Release ID: 1994529)

ANU/SMB/PLM/KPG/KRS



(Release ID: 1994595) Visitor Counter : 175