மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா 2024 ஜனவரி 10 முதல் 11 வரை மேற்கு வங்கத்தில் கடலோரப் பயணத்தின் 12-ம் கட்ட நிகழ்வுகளில் பங்கேற்கிறார்

Posted On: 09 JAN 2024 1:08PM by PIB Chennai

மேற்கு வங்கத்தின் பல்வேறு இடங்களில் 2024 ஜனவரி 10, 11 ஆகிய தேதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சாகர் பரிக்ரமா எனப்படும் கடலோரப் பயணத்தின் 12-ம் கட்ட  நிகழ்ச்சிகளில் மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா, இணைமைச்சர் டாக்டர் எல்.முருகன் ஆகியோர் பங்கேற்கின்றனர். கிசான் கடன் அட்டை திட்டப் பயனாளிகள் மற்றும் பல்வேறு தரப்பினருடன் மத்திய அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா இந்த நிகழ்வின் போது கலந்துரையாட உள்ளார். சிறப்பாக செயலாற்றும் முன்னோடி மீனவர்கள், மீன் வளர்ப்பவர்கள், இளம் மீன்பிடித் தொழில் முனைவோர் போன்றவர்களை அமைச்சர் கௌரவிக்கவுள்ளார்.

பிரதமரின் மீன்வளயத் திட்டத்தின் பயன்கள் குறித்து மீனவர்களுக்குப் பரவலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்

கடலோரப் பயணத்தின் 12-வது  கட்டம்  மேற்கு வங்கத்தின் கடலோரப் பகுதிகளான திகா, சங்கர்பூர் மீன்பிடித் துறைமுகம், டயமண்ட் துறைமுகத்தில் உள்ள சுல்தான்பூர் மீன்பிடித் துறைமுகம், கங்கா சாகர் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில்  மத்திய அரசின் மீன்வளத் துறை, மேற்கு வங்க அரசின் மீன்வளத்துறை, தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம், இந்தியக் கடலோர காவல்படை, இந்திய மீன்வள ஆய்வு நிறுவனம், மீனவர் சங்கங்கள் உள்ளிட்டவற்றைச் சேர்ந்த பிரநிதிகள் பங்கேற்கின்றனர்.

"சாகர் பரிக்ரமாவின்" முதல் கட்டப் பயணம்  2022, மார்ச் 5 அன்று குஜராத்தின் மாண்ட்வியில் தொடங்கியது. இதுவரை, சாகர் பரிக்ரமாவின் 11 கட்டங்கள் கடலோர மாநிலங்கள் மற்றும்  யூனியன் பிரதேசங்களான குஜராத், டாமன் -  டையூ, மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, அந்தமான் மற்றும் நிக்கோபார், கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரி, ஒடிசா ஆகியவற்றில் நடைபெற்றுள்ளன.

------

(Release ID: 1994458)

ANU/SMB/PLM/KPG/RR



(Release ID: 1994496) Visitor Counter : 123