பிரதமர் அலுவலகம்

நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் பயனாளிகளுடன் பிரதமர் டிசம்பர் 27 அன்று கலந்துரையாடுகிறார்


நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரைப் பயனாளிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்

Posted On: 26 DEC 2023 3:27PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி 2023  டிசம்பர் 27  அன்று மதியம் 12:30 மணிக்கு நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் பயனாளிகளுடன் காணொலிக்காட்சி வாயிலாக கலந்துகொண்டு  உரையாற்றுகிறார்.

நாடு முழுவதிலுமிருந்து நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் ஆயிரக்கணக்கான பயனாளிகள் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளூர் பிரதிநிதிகளும் கலந்து கொள்வார்கள்.

2023 நவம்பர் 15 அன்று தொடங்கப்பட்டதிலிருந்து, நாடு முழுவதும் உள்ள நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் பயனாளிகளுடன் பிரதமர் தொடர்ந்து உரையாடி வருகிறார்.  இந்த கலந்துரையாடல் மூன்று முறை காணொலி காட்சி மூலம் (நவம்பர் 30, டிசம்பர் 9,16) நடந்துள்ளது. மேலும், பிரதமர் சமீபத்தில் வாரணாசிக்கு சென்றபோது தொடர்ந்து இரண்டு நாட்கள் (டிசம்பர் 17-18) நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரைப் பயனாளிகளுடன் நேரடியாக உரையாடியுள்ளார்.

நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரை, அரசின் முக்கிய திட்டங்களின் பலன்கள் உரிய காலத்தில் அனைத்து பயனாளிகளுக்கும் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

***

ANU/PKV/IR/AG/KPG

 



(Release ID: 1990469) Visitor Counter : 98