நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய சுங்கம், மறைமுக வரிகள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு அகாடமி மற்றும் தேசிய நேரடி வரிகள் அகாடமி இடையே வளங்களைப் பகிர்ந்துகொள்வது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

Posted On: 24 NOV 2023 4:21PM by PIB Chennai

தேசிய சுங்கம், மறைமுக வரிகள், போதைப்பொருள் தடுப்பு அகாடமி மற்றும் தேசிய நேரடி வரிகள் அகாடமி இடையே சிறந்த நடைமுறைகள், புதுமையான தொழில்நுட்பங்கள் போன்ற வளங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (24.11.2023) கையெழுத்தானது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தேசிய நேரடி வரிகள் அகாடமி முதன்மைத்  தலைமை இயக்குநர் திரு ஜெயந்த் திதி மற்றும் தேசிய சுங்கம், மறைமுக வரிகள், போதைப்பொருள் தடுப்பு அகாடமி தலைமை இயக்குநர் திரு கே.என்.ராகவன் கையெழுத்திட்டனர். இந்நிகழ்ச்சியில் இரு அகாடமிகளின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

வரிவிதிப்பு, சட்ட நடைமுறைகள், வணிக நடைமுறை சட்டங்கள், பொருளாதார மற்றும் நிர்வாகச் சட்டம், தரவு பகுப்பாய்வு, இடர் மேலாண்மை போன்றவற்றில் அறிவுப் பகிர்வு, வளங்கள் பகிர்வு மற்றும் பல்வேறு பிரிவுகளில் கூட்டு ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.

என்.ஏ.சி.ஐ.என்

என்.ஏ.சி.ஐ.என் என்பது இந்திய வருவாய் சேவை (சுங்கம் மற்றும் மறைமுக வரிகள்) பயிற்சியாளர்களுக்குப் பயிற்சியளிப்பதற்காக நிறுவப்பட்ட உயர் பயிற்சி நிறுவனமாகும். சுங்கம், போதைப்பொருள் தடுப்புத் தொடர்பான சட்ட அமலாக்கம் மற்றும் பிற மறைமுக வரி தொடர்பான அம்சங்களில் பல்வேறு நாடுகளுடன்  பபயிற்சி மற்றும் பிற திறன் மேம்பாட்டு வளங்களை பரிமாறிக்கொள்வதன் மூலம் மகத்தான பங்களிப்பை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது.

என்.ஏ.டி.டி.

மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் வருவாய் சேவை (வருமான வரி) அதிகாரி நிலையிலான பயிற்சியாளர்களுக்கும், நடுத்தர நிலை முதல் மூத்த மேலாண்மை நிலை வரையிலான அதிகாரிகளுக்கும், பயிற்சி அளிக்க நாக்பூரில் நிறுவப்பட்ட உயர் பயிற்சி நிறுவனம் ஆகும்.

***

ANU/SMB/PLM/RS/KPG

 


(Release ID: 1979512)