தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய சர்வதேச திரைப்பட விழா கண்காட்சியை பார்வையிட்ட மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், "சினிமா பிரியர்களுக்கு ஆராய்வதற்கும், அனுபவிப்பதற்கும், கல்வி கற்பதற்கும் சரியான இடம்" என்று கூறினார்

கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த் கோவாவில் 54- வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் மத்திய மக்கள் தொடரபகத்தின் (சிபிசி) கண்காட்சியை தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு சிபிசி கண்காட்சி இந்திய திரைப்படங்களையும் அவற்றின் பங்களிப்புகளையும் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் எதிர்கால போக்குகளைப் பயன்படுத்தி முன்னிறுத்துவதன் சாராம்சத்தைப் பதிவு செய்கிறது. பனாஜியில் உள்ள கலா அகாடமியில் மத்திய தகவல் தொடர்பு, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் இந்த டிஜிட்டல் கண்காட்சியை  அமைத்துள்ளது.

மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கண்காட்சியைப் பார்வையிட்டு பாராட்டினார்இத்தகைய கண்காட்சிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், வி.எஃப்.எக்ஸ் போன்ற வரலாறு, புதிய தொழில்நுட்பம் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டியைப் பயன்படுத்தவும், சினிமா உலகில் ஒரு அதிவேகமான அனுபவத்தை வழங்கவும் இந்த கண்காட்சி அனைவரையும் அனுமதிக்கிறது என்று கூறினார்.

இக்கண்காட்சியின் முக்கிய கருப்பொருள் இந்திய சினிமாவை அடிப்படையாகக் கொண்டது, அங்கு பெண்கள் அதிகாரமளித்தல், சமூக காரணம் மற்றும் நடத்தை மாற்றம், மகாத்மா காந்தியின் சித்தாந்தம், ஊக்கமளிக்கும் இளைஞர்கள், தேசியப் பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் மத நல்லிணக்கம் மற்றும் பிராந்திய மொழிகள் மற்றும் கலாச்சாரம் போன்ற சினிமாவின் பல்வேறு அம்சங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.

-----------

ANU/AD/BS/RS/KRS


(रिलीज़ आईडी: 1978614) आगंतुक पटल : 176
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , Kannada , English , Urdu , Konkani , हिन्दी