பாதுகாப்பு அமைச்சகம்

காலாட்படை தளபதிகள் மாநாடு மாவ் காலாட்படை பள்ளியில் நிறைவடைந்தது

Posted On: 15 NOV 2023 12:46PM by PIB Chennai

37-வது காலாட்படை தளபதிகள் மாநாடு 2023 நவம்பர் 14 மற்றும் 15  ஆகிய தேதிகளில் மாவ்-வில் (MHOW) உள்ள காலாட்படை பள்ளியில் வெற்றிகரமாக நடைபெற்றது. இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த மாநாட்டிற்கு ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே தலைமை வகித்தார்.

காலாட்படையின் செயல்பாடுகள், பயிற்சி, திறன் மேம்பாடு தொழில்நுட்பம் ஆகியவை தொடர்பான அம்சங்கள் இதில் விவாதிக்கப்பட்டன. வழக்கமான போர் சூழ்நிலையிலும் வன்முறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் காலாட்படையின் திறன்களை மதிப்பிட்டு, எதிர்காலச் சவால்களுக்கு ஏற்ப காலாட்படையின் திறனை மேலும் மேம்படுத்தத் தேவையான முடிவுகள் எடுக்கப்பட்டன.

நேரடியாகவும், காணொலி முறையிலும் நடைபெற்ற இந்த மாநாட்டில், ராணுவத் துணைத் தளபதி, ஆறு பொதுத் தலைமை அதிகாரிகள், லெப்டினன்ட் ஜெனரல்கள் அந்தஸ்தில் உள்ள பதினேழு அதிகாரிகள், மேஜர் ஜெனரல்கள் அந்தஸ்தில் உள்ள பதினான்கு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பலர் நேரடியாக கலந்து கொண்ட நிலையில், மேலும் பலர் நாடு முழுவதும் உள்ள முக்கிய ராணுவ மையங்களிலிருந்து காணொலி வாயிலாக கலந்து கொண்டனர்.

***

ANU/PKV/PLM/RS/KPG



(Release ID: 1977067) Visitor Counter : 127


Read this release in: English , Urdu , Hindi , Punjabi