பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பழங்குடியினர் நல அமைச்சகத்தின் சிறப்பு இயக்கம் 3.0-ன் கீழ் தூய்மைப்படுத்துதல் மற்றும் நிலுவையில் உள்ள விஷயங்களுக்ககு தீர்வு காணும்பணி தீவிரம்

இடுகை இடப்பட்ட நாள்: 21 OCT 2023 11:42AM by PIB Chennai

பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் தூய்மைக்கான சிறப்பு இயக்கம் 3.0 முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்தல், நாடாளுமன்ற உறுப்பினர்களின் குறிப்புகள், தூய்மை இயக்கம், கோப்புகளை களையெடுத்தல் போன்றவை இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்த இயகத்தின் பல்வேறு நடவடிக்கைகளுக்கான இலக்குகளை அடையாளம் காண கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி இயக்கத்தின் ஆயத்தக் கட்டம் தொடங்கியது. இந்த இயக்கம் வரும் 31ஆம் தேதி வரை நீடிக்கும்.

இதுவரை வெளியிடங்களில் இரண்டு இயக்கங்கள் மேற்கொள்ளப்பட்டன. 1070 கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு, 352 கோப்புகள் அப்புறப்படுத்தப்பட்டன.  723 மின் கோப்புகள் மீது பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு 103 மின் கோப்புகள் நீக்கப்பட்டன.

பழங்குடியினர் விவகார அமைச்சகத்தால் அனைத்து இலக்குகளும் அடையாளம் காணப்பட்டு அதை அடைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

***

ANU/PKV/BS/DL


(வெளியீட்டு அடையாள எண்: 1969670) வருகையாளர் எண்ணிக்கை : 131
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi