உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஹரியானாவின் ரோத்தக்கில் பிரம்மலீன் மஹந்த் ஸ்ரீ சந்த்நாத் யோகி மற்றும் தேஷ்மேலின் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா இன்று சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்

இடுகை இடப்பட்ட நாள்: 11 OCT 2023 7:11PM by PIB Chennai

 மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா இன்று ஹரியானாவின் ரோத்தக்கில் பிரம்மலீன் மஹந்த் ஸ்ரீ சந்த்நாத் யோகி ஜி மற்றும் தேஷ்மேலா ஆகியோரின் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய திரு அமித்ஷா, மஹந்த்சந்த்நாத் ஜியின் சிலை திறப்பு விழாவில் மரியாதை செலுத்த நாடு முழுவதிலுமிருந்து பல துறவிகள் இங்கு வந்துள்ளனர் என்று கூறினார். நாட்டின் நலனுக்காக சாத்தியமற்ற பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடியால் மட்டுமே செய்ய முடியும் என்று மஹந்த் ஸ்ரீ சந்த்நாத் யோகி நம்பினார் என்று அவர் கூறினார்.

 

இந்தியா பல பிரிவுகளைக் கொண்ட நாடு என்றும், பல நூற்றாண்டுகளாக, இங்குள்ள பல முனிவர்கள் தவம் செய்து பிரபஞ்சத்தின் பல ரகசியங்களை வெளிப்படுத்தியுள்ளனர் என்றும் கூறினார். நமது இந்துப் பிரிவினரிடையே நாதப் பிரிவினர் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளனர் என்று அவர் கூறினார். நாத் பிரிவை சிவபெருமானே தொடங்கினார் என்று கூறப்படுகிறது. நாத் பிரிவின் 9 நாதர்களின் பாரம்பரியத்தில், பாபா மஸ்த்நாத் முதல் பாபா பாலக்நாத்ஜி வரை பல துறவிகள் சமூக சேவையின் பல பரிமாணங்களை உருவாக்க பணியாற்றியுள்ளனர், எனவே இன்று முழு பிரிவிலும் இந்த மடத்தின் மீது ஒரு பயபக்தி உணர்வு உள்ளது என்று திரு ஷா கூறினார். இந்த மடம் சுகாதாரம் மற்றும் கல்வித் துறையில் பல முக்கியமான நிறுவனங்களைக் கட்டமைத்துள்ளது என்று  அவர் கூறினார்.

***

 

SM/ANU/IR/RS/KRS


(வெளியீட்டு அடையாள எண்: 1966835) வருகையாளர் எண்ணிக்கை : 216
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Manipuri