சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

2070-ம் ஆண்டுக்குள் நாட்டை கார்பன் உமிழ்வற்ற நாடாக மாற்றுவதற்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை அடைய கட்டுமானத் துறையில் பசுமை முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று திரு நிதின் கட்கரி கூறினார்.

Posted On: 28 SEP 2023 2:48PM by PIB Chennai

2070-ம் ஆண்டுக்குள் நாட்டை கார்பன் உமிழ்வற்ற நாடாக மாற்ற வேண்டும் என்ற பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை அடைய கட்டுமானத் துறையில் பசுமை முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி கூறினார்.

தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமர் தலைமையில் நாட்டை தூய்மையாகவும், குப்பை இல்லாததாகவும் மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார். தற்போது நடைபெற்று வரும் தூய்மையே சேவை திட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் தூய்மை இயக்கம் , வழியோர வசதிகள், தாபாக்கள், சுங்கச்சாவடிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் 13,000 இடங்களில் திட்டமிடப்பட்டு, கிட்டத்தட்ட 7000 இடங்களில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன என்றார்.

இந்தியா முழுவதும் உள்ள நகர்ப்புறங்களில் அன்றாடம் உருவாகும் திடக்கழிவுகளை அகற்றுவது மிகப்பெரிய சுற்றுச்சூழல் சவாலாக உள்ளது என்று திரு கட்கரி கூறினார். சுமார் 10,000 ஹெக்டேர் நிலம் குப்பைக் கிடங்குகளாக உள்ளது  என்று அவர் கூறினார். நகர்ப்புற திடக்கழிவுகளை நெடுஞ்சாலை கட்டுமானத்தில் பயன்படுத்துவதற்கான தீர்வுகள் குறித்து அமைச்சகம் செயல்பட்டு வருவதாக அவர் கூறினார். தொழில்நுட்பம் மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் மூலம் கழிவுகளிலிருந்து செல்வத்தை உருவாக்குவது  சாத்தியமாகும் என்று அவர் கூறினார்.

நாட்டில் மாற்று உயிரி எரிபொருட்கள் குறித்து பேசிய திரு. கட்கரி, எத்தனால் பொருளாதாரத்தை உருவாக்குவதில் தான் வலுவான ஆதரவாளராக இருந்து வருவதாகவும், விவசாய வளர்ச்சியை 6% அதிகரிக்க எத்தனாலை பெரிய அளவில் எடுத்துக் கொள்ள வலியுறுத்தி வருவதாகவும் கூறினார்எத்தனால் சிக்கனத்தை ரூ.2 லட்சம் கோடியாக மாற்றுவதே இதன் நோக்கம் என்றார். தில்லியில்  உலகின் முதல் பிஎஸ்-6 இணக்கமான ஃப்ளெக்ஸ் எரிபொருள் வலுவான ஹைபிரிட் வாகனம் அறிமுகப்படுத்தப்படுவதன்  மூலம் ஃப்ளெக்ஸ் எஞ்சின்கள் 100% எத்தனாலில்  இயங்கும் என்றும், இதன் மூலம் பொருளாதாரத்திற்கு ரூ.1 லட்சம் கோடி மிச்சமாகும் என்றும் அவர் கூறினார். பானிபட்டில் உள்ள ..சி.எல் ஆலை நெல் வைக்கோல் போன்ற விவசாய கழிவுகளை எத்தனால் மற்றும் பயோபிட்டுமேனாக மாற்றுகிறது என்று அவர் கூறினார்.

உயிரி எத்தனால் உற்பத்தி தொழில்நுட்பங்களின் முன்னேற்றங்களுடன், 1 டன் அரிசி சுமார் 400 முதல் 450 லிட்டர் எத்தனாலை வழங்க முடியும், இது நிலைத்தன்மை மற்றும் ஆற்றல் சுதந்திரத்தை நோக்கிய குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை குறிக்கிறது என்று அமைச்சர் கூறினார்.

2025-ம் ஆண்டுக்குள் 1% நிலையான விமான எரிபொருளைப் பயன்படுத்துவதற்கான நிலை ஏற்படும் என்றும், எதிர்காலத்தில் இந்தியாவில்  5% எத்தனால் கலப்பாக அதிகரிக்க எதிர்கால திட்டங்கள் இருக்கும் என்றும் திரு கட்கரி கூறினார். இந்தியன் ஆயில் நிறுவனம் பானிபட்டில் 87,000 டன் நிலையான விமான எரிபொருளை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஆலையை நிறுவுகிறது.

இந்தியாவில் தொலைத்தொடர்புத் துறை சுமார் 6 லட்சம் மொபைல் டவர்களை இயக்குகிறது என்று திரு கட்கரி கூறினார். பாரம்பரியமாக, இந்த கோபுரங்கள் மின்சாரத்திற்காக டீசல் ஜெனரேட்டர் செட்டுகளை நம்பியுள்ளன, ஒரு கோபுரம் ஆண்டுக்கு சுமார் 8,000 லிட்டர் டீசலை பயன்படுத்துகிறது.

இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.25,000 கோடி செலவாகும் வகையில் 250 கோடி லிட்டர் டீசல் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஜெனரேட்டர் செட்களுக்கான எரிபொருளாக எத்தனாலை ஒருங்கிணைப்பது டீசலுக்கு ஒரு நிலையான மாற்றீட்டை வழங்குகிறது என்றும், சந்தை ஏற்கனவே 100% எத்தனாலில் ஜெனரேட்டர் செட்டை உருவாக்கியுள்ளது என்றும் அமைச்சர் கூறினார். வரும் காலங்களில் எத்தனால் அடிப்படையிலான ஜெனரேட்டர்களில் மட்டுமே செயல்பட ஜென்செட் தொழில்துறையை வலியுறுத்துவதாக அவர் கூறினார்.

 

ஹைட்ரஜன் எதிர்காலத்திற்கான எரிபொருள் மற்றும் இந்தியா எரிசக்தியின் நிகர ஏற்றுமதியாளராக மாறுவதற்கான மிக முக்கியமான வழியாகும் என்று திரு கட்கரி கூறினார்.

 

******

ANU/ SM /PKV/ KRS



(Release ID: 1961837) Visitor Counter : 90