விவசாயத்துறை அமைச்சகம்

வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கும் குறைந்தபட்ச அரசு மற்றும் அதிகபட்ச நிர்வாகத்தை வழங்குவதற்கும் ஒரு படியாக டிராக்டர் சோதனை வழிகாட்டுதல்களை அரசாங்கம் எளிதாக்குகிறது

Posted On: 30 AUG 2023 7:06PM by PIB Chennai

தொழில் செய்வதை எளிதாக்குவதற்கும், நம்பிக்கை அடிப்படையிலான நிர்வாகத்தை ஊக்குவிப்பதற்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, செயல்திறன் மதிப்பீட்டிற்காக டிராக்டர்களை பரிசோதிக்கும் செயல்முறையை 28 ஆகஸ்ட் 2023 அன்று அரசாங்கம் எளிமைப்படுத்தியுள்ளது. டிராக்டர் உற்பத்தியாளர்கள் இப்போது சி.எம்.வி.ஆர் / உற்பத்தி உறுதிப்படுத்தல் (சிஓபி) சான்றிதழ்கள் மற்றும் மானியத்தின் கீழ் சேர்க்க முன்மொழியப்பட்ட டிராக்டர் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறையால் வழங்கப்பட்ட அளவுகோல் விவரக்குறிப்புகளுக்கு இணங்குவதாக நிறுவனத்தால் வழங்கப்படும் சுய அறிவிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மானியத் திட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.  அதே நேரத்தில், உற்பத்தியாளர் டிராக்டர் மாதிரி சோதனைகளுக்காக சமர்ப்பிக்கப்பட்டதை உறுதிப்படுத்த வேண்டும், மேலும்  அது குறித்த சோதனை அறிக்கை 6 மாதங்களுக்குள் டிஏ & எஃப் டபிள்யூவிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மானியத்தின் கீழ் வழங்கப்படும் டிராக்டருக்கு உற்பத்தியாளர்கள் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

டிராக்டர் செயல்திறன் சோதனை, செயல்திறன் சோதனை, பிரேக் செயல்திறன் சோதனை ஆகிய சோதனைகளுக்கு உட்பட வேண்டும்.

----

ANU/AD/PKV/KPG



(Release ID: 1953600) Visitor Counter : 120


Read this release in: English , Urdu , Hindi , Telugu