பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

பிஎஸ் 6 தரநிலையில் இரண்டாம் நிலை எலக்ட்ரிக் ஃப்ளெக்ஸ் எரிபொருள் வாகனத்தின் முதல் முன்மாதிரியை மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி அறிமுகப்படுத்தினார்

Posted On: 29 AUG 2023 5:19PM by PIB Chennai

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் உருவாக்கிய பிஎஸ் 6 தரநிலையில் 3-ம் நிலைமின்சார. ஃப்ளெக்ஸ் எரிபொருள் வாகனத்தின உலகின் முதல் முன்மாதிரியை இன்று (29-08-2023) வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய திரு மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி, எத்தனால் ஒரு சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிபொருளாக இருப்பது இந்தியாவுக்கு நம்பிக்கைக்குரிய வாய்ப்புகளை அளிக்கிறது என்றார். எரிசக்தி தன்னிறைவை அடைவது, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது, மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற நடைமுறைகள் ஆகிய நோக்கங்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி  தலைமையிலான அரசு எத்தனாலுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்று அவர் கூறினார். எத்தனால் தொடர்பான பொருளாதாரம் 2 லட்சம் கோடி ரூபாயை எட்டும்போது விவசாய வளர்ச்சி விகிதம் தற்போதைய 12 சதவீதத்திலிருந்து 20 சதவீதத்தை எட்டும் என்று அவர் தெரிவித்தார்.

இந்தப் புதுமையான வாகனம் இன்னோவா ஹைக்ராஸை அடிப்படையாகக் கொண்டது மற்றும் இந்தியாவின் கடுமையான தரங்களுக்கு இணங்க வடிவமைக்கப்பட்டுள்ளது என்று திரு நிதின் கட்கரி கூறினார். இது உலகளவில் முதல் பிஎஸ் 6 (நிலை 2) மின்மயமாக்கப்பட்ட ஃப்ளெக்ஸ் எரிபொருள் வாகன முன்மாதிரியாகும் என்று அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய பெட்ரோலிய அமைச்சர் திரு. ஹர்தீப் சிங் பூரி இந்தியா மிகப்பெரிய எத்தனால் திறனைக் கொண்டுள்ளது என்று கூறினார்ஃப்ளெக்ஸ் எரிபொருள் வாகனம், ஹைபிரிட் எலக்ட்ரிக் வாகனம், மின்சார ஃப்ளெக்ஸ் எரிபொருள் வாகனம் ஆகியவற்றை ஊக்குவிப்பதன் இந்த திறனை நாடு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்தார்.

மின்சார ஃப்ளெக்ஸ் எரிபொருள் வாகனத்தில் ஃப்ளெக்ஸி எரிபொருள் இன்ஜின் மற்றும் மின்சார பவர்டிரெயின் இரண்டும் உள்ளன என அவர் தெரிவித்தார். இது ஒரு வலுவான ஹைபிரிட் எலக்ட்ரிக் வாகனத்தை (எஸ்.எச்..வி) போலவே அதிக எத்தனால் பயன்பாடு மற்றும் அதிக எரிபொருள் செயல்திறன் ஆகியவற்றின் இரட்டை பலன்களை வழங்குகிறது என்றும் இது 30 முதல் 50 சதவீத அதிக எரிபொருள் செயல்திறனை வழங்கும் எனவும் அவர் கூறினார்.

புதைப்படிவ எரிபொருளில் இருந்து மாறி, மின்சார ஃப்ளெக்ஸ் எரிபொருள் வாகனம் உள்ளிட்ட அனைத்து பசுமை தொழில்நுட்பங்களையும் ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.  2047-ம் ஆண்டுக்குள் எரிசக்தித் துறையில் தற்சார்பை அடையவும், பருவநிலை மாற்றத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை வழிநடத்தவும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை திரு ஹர்தீப் சிங் பூரி எடுத்துரைத்தார். அரசு மற்றும் தொழில்துறையினரின் பெரும்முயற்சியால், 8 ஆண்டு குறுகிய காலத்தில், இந்தியாவில் எத்தனால் கலப்பு 8 மடங்கு அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். இது 2014 ஆம் ஆண்டில் 1.53 சதவீதமாக இருந்தது எனவும் 2023 மார்ச் மாதத்தில் இது 11.5 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்இது இறக்குமதி செலவைக் குறைத்து  கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கும் வழிவகுக்கிறது என அவர் குறிப்பிட்டார்.

கனரகத் தொழில்துறை அமைச்சர் திரு மகேந்திர நாத் பாண்டே, டொயோட்டாவின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் அதிகாரியுமான திரு மசகாசு யோஷிமுரா, கிர்லோஸ்கர் சிஸ்டம்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி கீதாஞ்சலி கிர்லோஸ்கர் ஆகியோரும் தில்லியில் உள்ள ஜப்பான் தூதர் மற்றும் தூதரக அதிகாரிகளும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

***

AP/PLM/KRS



(Release ID: 1953344) Visitor Counter : 126


Read this release in: Marathi , English , Urdu , Hindi