பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜன்தன் திட்டம் தொடங்கப்பட்டு 9 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு பயனாளிகளுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 28 AUG 2023 8:26PM by PIB Chennai

ஜன்தன் திட்டம் தொடங்கப்பட்டு 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பயனாளிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் வெற்றிக்கு பங்களித்தவர்களையும் பிரதமர் மோடி பாராட்டினார்.

MyGov இன் ஒரு பதிவுக்கு  பதிலளித்து, பிரதமர் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:

பிரதமர் ஜன்தன்  திட்டத்தின் 9 ஆண்டுகளை நாம் கொண்டாடும் இந்த நேரத்தில், இந்தத் திட்டத்தால் பயனடைந்த அனைவருக்கும் நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் இதை வெற்றிகரமாக்க உழைத்த அனைவரையும் பாராட்டுகிறேன். எமது மக்களுக்கு அதிகாரமளிப்பதில் இது ஒரு மைல்கல் முயற்சியாகும். இந்த முன்முயற்சியின் மூலம், நாங்கள் கோடிக்கணக்கானவர்களை நிதி நீரோட்டத்திற்குள் கொண்டு வந்துள்ளோம், நமது வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் ஒவ்வொரு இந்தியருக்கும் சரியான இடம் இருப்பதை உறுதி செய்துள்ளோம்.

 

PRID=1953042


AP/ANU/ PKV/KRS


(Release ID: 1953081) Visitor Counter : 154