இந்திய போட்டிகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

போட்டித் தன்மைக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ராஜஸ்தானில் வேதியியலாளர் சங்கங்களுக்கு எதிராக தடை உத்தரவை இந்திய போட்டி ஆணையம் பிறப்பித்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 25 AUG 2023 5:37PM by PIB Chennai

இந்திய போட்டி ஆணையம் ('சி.சி.') 23.08.2023 அன்று ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட மற்றும் தாலுகா அளவிலான வேதியியலாளர் சங்கங்களுக்கு எதிராக ஒரு உத்தரவை பிறப்பித்தது. அந்த சங்கங்கள் போட்டிச் சட்ட விதிகளை மீறியதாக கண்டறியப்பட்டது

 

 

சோலார் லைஃப் சயின்சஸ் மெடிகேர் பிரைவேட் லிமிடெட் ('சோலார்') தாக்கல் செய்த தகவல்களின் அடிப்படையில் இந்த விசாரணை தொடங்கப்பட்டது. சோலார் நிறுவனத்தின் மருந்து தயாரிப்புகளை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பதன் மூலம் வேதியியலாளர் சங்கங்கள் போட்டிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டதுபதிவு செய்யப்பட்ட ஆதாரங்கள் மற்றும் இந்த சங்கங்களின் தலைவர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில், விதிமீறல்களை சி.சி. கண்டறிந்தது.

 

2020 ஆம் ஆண்டின் வழக்கு எண் 20-ல் உள்ள உத்தரவின் நகல் www.cci.gov.in  என்ற சி.சி.-யின் இணையதளத்தில் உள்ளது.

 

Release ID=1952163

SM/PLM/KRS


(வெளியீட்டு அடையாள எண்: 1952315) வருகையாளர் எண்ணிக்கை : 148
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , English , Urdu , हिन्दी