தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி நிலையான வளர்ச்சியுடன் லாபப் பயணத்தைத் தொடர்கிறது

Posted On: 22 AUG 2023 5:35PM by PIB Chennai

வங்கிச் சேவைத் துறையில் ஒரு மாற்றகரமான மைல்கல்லை எட்டியுள்ள இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (ஐபிபிபி) அதன் லாபப் பாதையில் தொடர்வதாக பெருமையுடன் அறிவிக்கிறது, நிலையான நிதி உள்ளடக்கம் மற்றும் குடிமக்களுக்கு அதிகாரமளித்தலுக்கான அதன் உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் லாபப் பயணத்தைக் கொண்டாடிய அந்த வங்கி, இந்த நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவில் வெற்றிகரமான லாப ஓட்டத்தைத் தொடர்கிறது, நாட்டின் தொலைதூர மூலைகளில் கூட யாரும் பின்தங்கிவிடக்கூடாது என்பதை உறுதிசெய்து, டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியை இயக்க முழு மனதுடன் உறுதிபூண்டுள்ளது.

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி வப்பட்டதிலிருந்து, நாடு முழுவதும் கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு வீட்டு வாசலில் வங்கி சேவைகளை விரிவுபடுத்தும் கனவால் உந்தப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டில் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மற்றும் சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் தொடங்கப்பட்ட  இந்தப் பயணம், மிகக் குறுகிய காலத்தில் முன்னெப்போதும் இல்லாத வெற்றியைக் கண்டது.

2022-23 நிதியாண்டில் ரூ.20.16 கோடி செயல்பாட்டு லாபத்தை ஈட்டிய அசாதாரண சாதனையைப் பகிர்ந்து கொள்வதில் ஐபிபிபி மகிழ்ச்சியடைகிறது. ஒட்டுமொத்த வருவாயில் 66.12 சதவீத வளர்ச்சி காணப்பட்டது, இது ஒட்டுமொத்த செயல்பாட்டு செலவுகளில் 17.36 சதவீத அதிகரிப்பை தாண்டியது, இந்த சாதனையின் முக்கிய காரணிகளாக இருந்தன. இது ஐபிபிபியின் வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட மற்றும் செலவு குறைந்த வங்கி மாதிரியின் சக்தியை நிரூபிக்கிறது.

"ஐபிபிபியின் வெற்றிக் கதை எங்கள் அர்ப்பணிப்புள்ள குழு, பங்குதாரர்கள் மற்றும் மிக முக்கியமாக, ஏழு கோடிக்கும் அதிகமான மதிப்புமிக்க வாடிக்கையாளர்களைக் கொண்ட எங்கள் குடும்பத்தின் நம்பிக்கை ஆகியவற்றின் கூட்டு முயற்சிகளுக்கு ஒரு சான்றாகும்" என்று இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு ஜே வெங்கட்ராமு மேற்கோள் காட்டினார். "ஜன்தன், ஆதார், இந்தியா ஸ்டாக் போன்ற பல கொள்கை முன்முயற்சிகள் மற்றும் நிதி சேர்க்கை துறையில் வேறுபட்ட வங்கி வகை, -கேஒய்சி போன்ற ஒழுங்குமுறை உந்துதல்களுக்கு நன்றி, இது ஐபிபிபியின் வெற்றிக் கதையை முன்னெடுத்துச் செல்வதில் பெரும் பங்களித்தது. வங்கியின் விவேகமான நிதி மேலாண்மை, ஒழுங்குமுறை ஆதரவுடன், வாடிக்கையாளர் தளம் மற்றும் தயாரிப்பு வழங்கல்களில் அதிவேக வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது, "என்று அவர் மேலும் கூறினார்.

1,55,000 தபால் நிலையங்கள் (கிராமப்புறங்களில் 1,35,000) மற்றும் 3,00,000 அஞ்சல் ஊழியர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய அஞ்சல் வலையமைப்பை மேம்படுத்துவதன் மூலம் இன்று ஐபிபிபி இந்தியாவில் உள்ள சாமானிய மக்களுக்கு மிகவும் அணுகக்கூடிய, மலிவு மற்றும் நம்பகமான வங்கியாக மாறியுள்ளது. இவ்வாறாக, பாரம்பரிய வங்கிகள் வழக்கமான தடைகள் காரணமாகப் பிடிக்கத் தவறிய இடங்களில் செயல்படுவதற்காக, தேசிய அளவில் ஒரு பி..ஜி.டி. வங்கிச் சேவைத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி பற்றி

மத்திய அரசுக்கு சொந்தமான 100 சதவீத பங்குகளுடன்  செப்டம்பர் 1, 2018 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியால் ஐபிபிபி தொடங்கப்பட்டது. இந்தியாவில் சாமானிய மக்களுக்கு மிகவும் அணுகக்கூடிய, மலிவு மற்றும் நம்பகமான வங்கியை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையுடன் இந்த வங்கி அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் அடிப்படை பணி, வங்கிச் சேவை இல்லாத மற்றும் குறைந்த வங்கிச் சேவைக்கான தடைகளை நீக்கி, அஞ்சல் வலையமைப்பைப் பயன்படுத்தி கடைசி மைல்களை அடைவதாகும்.

----

(Release ID: 1951116)

ANU/AP/PKV/KRS



(Release ID: 1951201) Visitor Counter : 135


Read this release in: English , Urdu , Hindi , Telugu