குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

‘அறிவொளி ஆற்றல் மிகுந்து வரும் நகரில் உள்ள உயர் சிந்தனைக்கு உத்வேகம் அளித்தல் தொடர்பான மாநாட்டை ஆரோவில்லில் குடியரசுத் தலைவர் தொடங்கிவைத்தார்

Posted On: 08 AUG 2023 6:13PM by PIB Chennai

‘அறிவொளி ஆற்றல் மிகுந்து வரும் நகரில் உள்ள  உயர் சிந்தனைக்கு உத்வேகம் அளித்தல்’ தொடர்பான  மாநாட்டை  குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (08.08.2023) ஆரோவில்லில் தொடங்கிவைத்தார். முன்னதாக மாத்ரி மந்திரையும்  ஆரோவில்லில் நகர கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், உயர்வான மனம் மனிதர்களை தெய்வங்களாக மாற்ற முடியும் என்று ஸ்ரீஅரவிந்தர் நம்பினார். உயர்வான மனநிலை மூலம் இந்த உலகத்தை தெய்வீகமானதாக மாற்றுகின்ற தத்துவத்தை அவர் வழங்கினார். தெய்வீகம் என்பது வேறுபட்ட பொருளுடையது. நம்மில் ஒவ்வொருவருக்கும் ஒரு விளக்கத்தை அளிப்பது. ஆனால், ஒன்று பொதுவானது. அந்த ஒன்று, தெய்வீகம் என்பது உலகாதாயத்திற்கு மேலானது. உறுதிக்கு அப்பாற்பட்டது. தெய்வீக மனம் என்பது தூய்மையான மனம். அது தன்னலத்தை கடந்தது. அது அனைவருக்குமான  வளர்ச்சி, ஒற்றுமை, மேம்பாடு பற்றி சிந்திப்பது என்றார்.

 

ஒரு மனதின் ஆன்மிக விழிப்புணர்வு சாமான்ய மனிதரை பேருணர்வு பெற்ற மனிதராக மாற்றமுடியும். இந்த விழிப்புணர்வு, தனி நபர்களை, அமைப்புகளை, நாடுகளை, உலகத்தை மாற்றமுடியும். ஒருவர் விழிப்புணர்வு அடைந்தால் அவரை சுற்றியுள்ள குறிப்பாக, ஏழை எளிய மக்களின் தேவைகளையும் உணர்வார்விழிப்புணர்வு பெற்ற மனங்கள் ஒன்றிணையும் போது, பொதுவான இலக்குகளை நோக்கிய பணி, கற்பனைக்கும் எட்டாத பயன்களைத் தரும் என்று குடியரசுத் தலைவர் கூறினார்.

உலகம் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகளுக்கு பொருத்தமானதாக மகரிஷி அரவிந்தரால் முன்மொழியப்பட்ட அண்டத்தின் உயிரினங்கள் பற்றி சிந்தனை இருப்பதாக நான் நினைக்கிறேன்அண்டத்தின் உணர்வு கோட்பாட்டை  அறிந்து கொண்டு பின்பற்றும் போது, உலகம் இன்று எதிர்கொண்டுள்ள பல பிரச்சனைகளுக்கு நல்லிணக்கத்துடன் தீர்வுகாண முடியும். உச்ச நிலை மனம் மற்றும் அண்ட நிலை குறித்த  மனதின்  கோட்பாடுகள் வாழ்க்கையின் நோக்கத்தை புரிந்துகொள்வதற்கு வழிவகுக்கும். இந்த சிந்தனைகள் உலகத்தை நல்லிணக்கத்தோடும், அமைதியாகவும் வாழ்வதற்கு உகந்ததாக  மாற்ற உதவி செய்யும் என்று குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.

 

உச்சநிலை உணர்வை அடைவது என்ற மிகப்பெரிய இலக்கை எட்டுவதற்கு மனித மனங்களைக் கண்டறிவதற்கும், உருவாக்குவதற்கும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கும் ஆரோவில் ஓர் இடமாக விளங்குகிறது. மக்கள் அனைவரின் வளர்ச்சியையும் இது மேம்படுத்துகிறது. உலகளாவிய சவால்களுக்கு நீடித்த தீர்வுகளை வழங்குவதில் உலகத்திற்கு இந்தியா தலைமையேற்க  தயாராக உள்ளது. இந்த முயற்சியில் ஆரோவில் சமுகம் மகத்தான பங்களிப்பை  செய்ய முடியும் என்றும் திருமதி திரௌபதி முர்மு கூறினார்.

***

 SM/SMB/RS/KRS


(Release ID: 1946879)