சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

என்.சி.ஆரில் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்கான டிஸ்காம்களின் தயார்நிலையை சிஏக்யூஎம் ஆய்வு செய்கிறது

Posted On: 27 JUL 2023 2:12PM by PIB Chennai

வரவிருக்கும் குளிர்காலத்தில், குறைந்த வெப்பநிலை, சாதகமற்ற வானிலை / வானிலை நிலைமைகள் காரணமாக காற்று மாசு அளவுகள் பொதுவாக அதிகரிக்கும் போது, தேசிய தலைநகர் பிராந்தியம் என்.சி.ஆர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்று தர மேலாண்மை ஆணையம் (சி.ஏ.க்யூ.எம்) தில்லி மற்றும் உத்தரபிரதேசத்தின் என்.சி.ஆர் மாவட்டங்களின் மின் விநியோக நிறுவனங்களுடன்  நிலைமையை மறுஆய்வு செய்தது.   இந்தக் கூட்டத்தில் என்.சி.ஆர் மாநில அரசுகள் மற்றும் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் / குழுவின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.  இந்த கூட்டத்தில் தில்லி மற்றும் ஹரியானா, உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் என்.சி.ஆர் மாவட்டங்களில் நம்பகமான மற்றும் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்காக மின் விநியோக நிறுவனங்கள்( டிஸ்காம்கள்)  எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 

இக்கூட்டத்தில், தொழில்துறை, வணிக, நிறுவன மற்றும் குடியிருப்பு அலகுகள்/ வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் டீசல் ஜெனரேட்டர் (டிஜி) செட்டுகளை கண்மூடித்தனமாகவும் பெரிய அளவிலும் பயன்படுத்துவதால் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் குறைக்க வேண்டியதன் அவசியம் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.  தில்லி, என்.சி.ஆர், ஹரியானா, உ.பி மற்றும் ராஜஸ்தான்  டிஸ்காம்கள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக அந்தந்த அதிகார வரம்பில் நம்பகமான மற்றும் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் உறுதியளித்தன. அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில், இப்பகுதியில் காற்றின் தரக் குறியீடு பொதுவாக இந்த மாதங்களில் உயர்கிறது, எனவே மின்வெட்டு / மின் தடை காரணமாக மின் உற்பத்திக்கு டிஜி செட்டுகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டிய அவசியம் உள்ளது.

02.06.2023 அன்று ஆணைய எண் 73-ன்படி, தொழில்துறை, வணிக, குடியிருப்பு, அலுவலக நிறுவனங்கள் உட்பட என்.சி.ஆரில் உள்ள அனைத்து துறைகளிலும் டி.ஜி செட்டுகளின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த ஆணையம் உத்தரவிட்டது. டிஜி செட்களை ஒழுங்குபடுத்துவதற்கான திருத்தப்பட்ட அட்டவணை 01.10.2023 முதல் என்.சி.ஆர் முழுவதும் நடைமுறைக்கு வரும்.இரட்டை எரிபொருள் கருவிகள் மற்றும் / அல்லது உமிழ்வு கட்டுப்பாட்டு சாதனங்களின் (ஈ.சி.டி) ரெட்ரோ பொருத்துதல், தேவைப்படும் இடங்களில், 30.09.2023 க்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட வேண்டும்.

மேலும், மின் பகிர்மானக் கழகங்களின் சட்டப்பூர்வ வழிகாட்டுதல்களை முற்றிலும் மீறி, தொழிற்சாலைகள்/ தளங்களுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பை துண்டிக்கும் ஆணையத்தின் உத்தரவுகள் பின்பற்றப்படுவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. நடப்பாண்டில், 203 அலகுகள் / நிறுவனங்கள் மீது மூடல் ஆணைகளை ஆணையம் பிறப்பித்துள்ளது. முற்றிலும் மீறும் அலகுகள் தொடர்பாக மின் துண்டிப்பு தாமதமாவது பிராந்தியத்தின் காற்று மாசுபாடு சுமையை அதிகரிக்கிறது என்று டிஸ்காம்களுக்கு குறிப்பாக தெரிவிக்கப்பட்டது. ஆணைய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட 3 நாட்களுக்குள் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவது உறுதி செய்யப்படும் என்றும் ஆணையத்திற்கு தெரிவிக்கப்படும் என்றும் டிஸ்காம்கள் உறுதியளித்தன.

-----

ANU/PKV/KPG

 


(Release ID: 1943217)
Read this release in: English , Urdu , Hindi , Telugu