வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
வடகிழக்கு மாநிலங்களில் ரயில், விமானம் மற்றும் சாலை வலையமைப்புகள் குறித்த அரசாங்க திட்டங்கள்
Posted On:
20 JUL 2023 3:13PM by PIB Chennai
வடகிழக்கு மாநிலங்களில் ரயில், விமானம் மற்றும் சாலை நெட்வொர்க்குகளை உருவாக்க அரசு நிறைவேற்ற திட்டமிட்டுள்ள திட்டங்கள் குறித்து அந்தந்த ஒருங்கிணைப்பு அமைச்சகங்கள் அளித்த தகவல்கள் பின்வருமாறு:
சாலை இணைப்பு: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.1,02,594 கோடி மதிப்பீட்டில் 261 சாலைத் திட்டங்கள் வடகிழக்கு மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் மற்றும் மாநில பொதுப்பணித் துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், வடகிழக்கு சிறப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் மற்றும் வடகிழக்கு சாலை மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றின் கீழ் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் ரூ.3372.58 கோடி மதிப்பிலான 77 சாலைத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
ரயில் இணைப்பு: வடகிழக்கு மாநிலங்களில் ரூ.81,941 கோடி செலவில் மொத்தம் 1909 கி.மீ நீளமுள்ள 19 இரயில்வே உள்கட்டமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு, திட்டமிடல் / ஒப்புதல் / செயலாக்கத்தின் பல்வேறு நிலைகளில் உள்ளன. இவற்றில் 482 கி.மீ. நீளத்திற்கு 2023 மார்ச் வரை ரூ.37,713 கோடி செலவிடப்பட்டுள்ளது.
விமான இணைப்பு: சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் 21.10.2016 அன்று பிராந்திய இணைப்புத் திட்டம் (ஆர்.சி.எஸ்)-உடான் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. வடகிழக்கு பிராந்தியத்தில் உடான் திட்டத்தின் கீழ் 64 வழித்தடங்களை உள்ளடக்கிய ரூப்சி, தேஜு, தேஜ்பூர், பசிகாட், ஜோர்ஹாட், லீலாபரி, ஷில்லாங், பாக்யாங், இட்டாநகர் மற்றும் திமாபூர் ஆகிய விமான நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. வடகிழக்கு பிராந்தியத்தில் 2014 ஆம் ஆண்டில் ஒன்பது விமான நிலையங்கள் செயல்பாட்டில் இருந்தன. தற்போது வடகிழக்கு பிராந்தியத்தில் 16 விமான நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கூடுதலாக, ஜிரோவில் மேம்பட்ட தரையிறங்கும் மைதானமும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மேலும், அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா மற்றும் திரிபுரா மாநிலங்களில் ரூ.1543.70 கோடி மதிப்பிலான 13 முக்கிய பொறியியல் உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் வடகிழக்கு மாநிலங்களில் ரயில், விமானம் மற்றும் சாலை வசதிகளின் கீழ் ரூ.4345.16 கோடி மதிப்பிலான 51 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டிற்கான மூலதன முதலீட்டிற்காக மாநிலங்களுக்கு சிறப்பு உதவி வழங்கும் திட்டத்தின் கீழ், நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை வடகிழக்கு மாநிலங்களுக்கு பின்வருமாறு நிதியை விடுவித்துள்ளது:
2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டிற்கான மூலதன முதலீட்டிற்காக மாநிலங்களுக்கு சிறப்பு உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் வடகிழக்கு மாநிலங்களுக்கு வெளியீடுகள்
புதிய திட்டங்களைத் தொடங்குவதற்கு முன்பு தேவையான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) செய்யப்படுகிறது. தேவையான சுற்றுச்சூழல் அனுமதி, அமைச்சகம் / துறைகள் / மாநில அரசின் சம்பந்தப்பட்ட முகமைகளால் பெறப்படுகிறது.
இத்தகவலை மத்திய வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டிமாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
*****
(Release ID: 1940985)
ANU/PKV/RJ
(Release ID: 1941124)