பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் நடந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல்

பிரதமர் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு அறிவிப்பு

Posted On: 26 JUN 2023 12:12PM by PIB Chennai

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் நடந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 அளிக்கப்படும்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் நடந்த பேருந்து விபத்து வேதனையளிக்கிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம், பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 அளிக்கப்படும்: பிரதமர்”.

AP/PKV/RR/KRS

***



(Release ID: 1935314) Visitor Counter : 148