உள்துறை அமைச்சகம்

மேற்கு வங்கத்தில் இந்திய நிலத் துறைமுக ஆணையம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா அடிக்கல் நாட்டினார்

Posted On: 09 MAY 2023 5:15PM by PIB Chennai

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா, மேற்கு வங்கத்தில் இந்திய நிலத் துறைமுக ஆணையம், எல்லைப் பாதுகாப்புப் படை  ஆகியவற்றின் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டினார்.  புதிதாக கட்டப்பட்ட எல்லைப் புறக்காவல் நிலையங்கள்  மற்றும் பிற கட்டிடங்களையும் அவர்  திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு நிஷித் பிரமாணிக், துறைமுகங்கள் துறை இணை அமைச்சர் திரு சாந்தனு தாக்கூர், இந்திய நிலத் துறைமுக ஆணையத்தின் தலைவர் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநர் உட்பட பல உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் பிறந்தநாளை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அவருக்கு மரியாதை செலுத்தினார்.

மத்திய உள்துறை அமைச்சர் தனது உரையில், ஒரு அமைப்பாக, இந்திய நிலத் துறைமுக ஆணையம் இந்தியாவின் பொருளாதாரத்தை விரைவுபடுத்த உதவுவது மட்டுமல்லாமல், இந்தியாவின் நட்புச் செய்தியின் தூதுவராகவும் உள்ளது என்றார். அனைத்து தெற்காசிய நாடுகளுடனும் 15 ஆயிரம் கிலோமீட்டர் நீளமுள்ள இந்தியாவின் தரை எல்லையை உள்ளடக்கிய நமது கலாச்சார மற்றும் வர்த்தக உறவுகளை முன்னெடுத்துச் செல்லும் மிகப்பெரிய நிறுவனமாக இந்திய தரை துறைமுக ஆணையம் திகழ்கிறது என்றார் அவர். 2016 ஆம் ஆண்டு முதல் இந்த அமைப்புக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஒரு புதிய உத்வேகம், திசை மற்றும் பரிமாணத்தை வழங்கியுள்ளார் என்று அவர் கூறினார். வர்த்தக நோக்கத்திற்காக தினமும் 600-700 ட்ரக்குகள் பெட்ராபோலுக்கு வருவது அடிக்கடி நெரிசல் பிரச்சனைக்கு வழிவகுக்கிறது. ஆனால், தற்போது இரண்டாவது சரக்கு கேட் அமைப்பதன் மூலம், இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.

2016-2022 ஆம் ஆண்டுக்கு இடையில், தரை துறைமுக சரக்கு மற்றும் பயணிகளின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று திரு அமித் ஷா கூறினார். 2016-17ஆம் ஆண்டில் வர்த்தகத் தொகை ரூ. 18,000 கோடி, அது இப்போது ரூ. 30,000 கோடியைத் தாண்டியுள்ளது, இது இந்திய தரை துறைமுக ஆணையத்தின் சிறந்த செயல்திறனைக் காட்டுகிறது. 2022-23 ஆம் ஆண்டில், 20 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் தரை துறைமுகங்கள் வழியாக செல்வார்கள் என்று திரு ஷா கூறினார். கூடுதலாக, 2021 ஆம் ஆண்டில் பெட்ராபோலில் பயணிகள் முனையக் கட்டிடம் கட்டப்பட்ட பிறகு, ஆண்டுக்கு 5 லட்சம் பயணிகள், அதாவது தினமும் சுமார் 11,000 பயணிகள் பயணம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில், அரசின் எல்லைப் பாதுகாப்புக் கொள்கை மிகவும் தெளிவாகவும் துல்லியமாகவும் உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். எல்லையோரப் பகுதிகளில் வலுவான உள்கட்டமைப்புப் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது, மேலும் நாட்டின் பிற கிராமங்களைப் போலவே எல்லையோர கிராமங்களிலும் நலத் திட்டங்களின் பலன்களை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நில வர்த்தகத்தை ஊக்குவிப்பதன் மூலம், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலான அரசாங்கம், எல்லையோர கிராமங்களில் உள்ளூர் மக்களுக்கு வணிகம், தொழில் மற்றும் குரல் செய்திகளை பரப்ப முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றார்.

இந்தியா 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் கனவை நனவாக்குவதற்கு மட்டுமின்றி, அண்டை நாடுகளுடன் நல்லுறவை உறுதி செய்வதற்கும் தரைத் துறைமுகங்களின் மேம்பாடு முக்கியமானது என்று திரு ஷா கூறினார். இந்தியாவின் தரை துறைமுக ஆணையம் இந்தியாவின் அண்டை நாடுகளுடன் தூதுவராக செயல்பட்டு முன்னேறி வருகிறது என்றார். கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் தரை துறைமுக ஆணையத்திற்காக பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன என்று திரு  ஷா கூறினார்.

பனிச் சிகரங்கள் முதல் பாலைவனம் வரையிலும், நில எல்லையில் இருந்து வங்காள விரிகுடா வரையிலும், எல்லா இடங்களிலும் நமது நிலத்தையும், எல்லைகளையும் பாதுகாக்க எல்லைப் பாதுகாப்புப் படை செயல்பட்டு வருகிறது. பிஎஸ்எப் இல்லாமல் இந்தியாவின் தரை எல்லைகளின் பாதுகாப்பை கற்பனை செய்து பார்க்க முடியாது. எல்லையில் பிஎஸ்எப் வீரர்கள் பணியமர்த்தப்பட்டால், நாட்டின் நில எல்லைகளின் பாதுகாப்பைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை என்று திரு ஷா கூறினார்.

 

----

AD/PKV/KPG



(Release ID: 1922900) Visitor Counter : 145