பாதுகாப்பு அமைச்சகம்
மாலத்தீவுகளில் இருந்து மீட்கப்பட்ட 10 இந்திய மீனவர்கள் பத்திரமாக தாயகம் அழைத்து வரப்பட்டனர்
Posted On:
06 MAY 2023 7:06PM by PIB Chennai
மாலத்தீவு கடல் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட 10 இந்திய மீனவர்கள், மே 6, 2023 அன்று இந்திய கடலோரக் காவல் படையினரால் விசாகப்பட்டினத்திற்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டனர்.
![](https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/L2Photo(1)QOLI.jpg)
இவர்கள், கடந்த ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதி கன்னியாகுமரி அருகே உள்ள தேங்காய்பட்டினத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். அவர்கள் பயணம் செய்த படகு இயந்திரக் கோளாறால் மாலத்தீவிற்குச் சென்றதை அடுத்து உதவி ஏதும் இல்லாமல் மீனவர்கள் ஐந்து நாட்கள் திண்டாடினார்கள். ஏப்ரல் 26-ஆம் தேதி, இந்தியக் கடலோர காவல் படையுடன் இணைந்து மாலத்தீவு தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் அவர்களை மீட்டனர்.
![](https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/L2Photo(2)EM0C.jpg)
பத்து மீனவர்களுள், எட்டு பேர் கேரள மாநிலம் விழிஞ்சம் பகுதியைச் சேர்ந்தவர்கள், இருவர் கன்னியாகுமரியைச் சேர்ந்தவர்கள். மீட்கப்பட்ட மீனவர்களுக்கு முதற்கட்ட மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில், அவர்கள் ஆரோக்கியமாக இருப்பது தெரியவந்துள்ளது.
***
AD/RB/DL
(Release ID: 1922403)
Visitor Counter : 150