சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் போக்குவரத்துத் துறை அமைச்சர்களின் 10-வது கூட்டத்திற்கு திரு நிதின் கட்கரி தலைமை தாங்கினார்

Posted On: 28 APR 2023 1:20PM by PIB Chennai

புதுதில்லியில் இன்று நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் போக்குவரத்துத் துறை அமைச்சர்களின்10-வது கூட்டத்திற்கு திரு நிதின் கட்கரி தலைமை தாங்கினார். இந்த ஆண்டு இந்தியாவின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான்,  ரஷ்யா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் போக்குவரத்துத் துறை அமைச்சர்கள் பங்கேற்றனர்.  சிறந்த திறன்மிக்க, நீடித்த தன்மையை அடைவதற்காக  போக்குவரத்தில் கரியமிலவாயு உமிழ்வை குறைத்தல், மின்னணு மாற்றம் மற்றும் புதுமை  தொழில்நுட்பம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கருத்துக்கு உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் ஆதரவு தெரிவித்தனர்.

போக்குவரத்துத் துறையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பு நாடுகளுக்கிடையே இணைப்பை மேம்படுத்துவதற்காக சிறப்பு பணிக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பேசிய திரு நிதின் கட்கரி, சாலைப்போக்குவரத்துத் துறையில் உள்ள சவால்களுக்கு சிறந்த தீர்வுகளை காண்பதற்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

***

AD/IR/RS/KRS



(Release ID: 1920504) Visitor Counter : 155