பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

ரிபப்ளிக் டிவி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

Posted On: 26 APR 2023 11:19PM by PIB Chennai

அர்னாப் கோஸ்வாமி அவர்களே, ரிபப்ளிக் ஊடக நெட்வொர்க்கை சேர்ந்த ஊழியர்களே, நாடு முழுவதிலும் மற்றும் உலகெங்கும் உள்ள தொலைக்காட்சி ரசிகர்களே அனைவருக்கும் வணக்கம்.

நண்பர்களே,

ரிபப்ளிக் டிவி அடுத்த மாதம் 6-வது ஆண்டை நிறைவு செய்கிறது. இதற்காக அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2019 ஆம் ஆண்டு இந்த தொலைக்காட்சியின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டபோது, பல ஆண்டுகளுக்குப் பின்னர் அரசு மீது நம்பிக்கை வைத்து மக்கள் இரண்டாவது முறையாக எங்களுக்கு வாக்களித்திருந்தனர்.

இந்திய பொருளாதாரம் ஒரு ட்ரில்லியன் அளவை எட்டுவதற்கு 60 ஆண்டுகள் தேவைப்பட்டது. 2014-ஆம் ஆண்டு பல்வேறு சவால்களுக்கு இடையே 2 ட்ரில்லியனை அடைந்தது. பெருந்தொற்றுக்கு இடையேயும், கடந்த 9 ஆண்டுகளில் இந்தியா பொருளாதாரத்தில் 10-வது இடத்திலிருந்து 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்கள் கூட ஸ்தம்பித்துள்ள வேளையில், நெருக்கடியிலிருந்து இந்தியா மீண்டு வந்ததோடு, விரைவாக முன்னேறி வருகிறது.

நண்பர்களே,

2014-ஆம் ஆண்டிற்குப் பிறகு மத்திய அரசு கொண்டு வந்த கொள்கைகள், முதல் தர பயன்களை மட்டுமல்லாது, அவற்றின் இதர தாக்கங்களிலும் கவனம் செலுத்தியது. கடந்த நான்கு ஆண்டுகளில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தினால் கட்டப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 3.75 கோடியாக உயர்ந்துள்ளது. இத்திட்டம், ஏழைகள் மற்றும் நலிவடைந்த பிரிவினரின் தன்னம்பிக்கையை புதிய உயரத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறது. முத்ரா திட்டத்தின் கீழ் 40 கோடிக்கும் அதிகமான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் 70% பயனாளர்கள் பெண்கள்.

நண்பர்களே,

நேரடி பயன் பரிவர்த்தனை, மின்சாரம், தண்ணீர் வசதிகள் வழங்கும் திட்டங்கள் உள்ளிட்டவை அடிமட்ட அளவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முதன்முறையாக நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கு பாதுகாப்பும், மரியாதையும் கிடைத்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் தலித்துகள், நலிவடைந்தோர், பழங்குடிகள், பெண்கள், ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் உட்பட அனைவரும் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றனர். மக்கள் நிதி கணக்கு, ஆதார் மற்றும் செல்பேசி அடங்கிய ஜாம் திட்டத்தின் வாயிலாக 10 கோடி போலி பயனாளிகள் நீக்கப்பட்டிருக்கிறது. 45 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு, சுமார் ரூ. 28 லட்சம் கோடி பயனாளிகளுக்கு நேரடியாக பரிமாற்றம் செய்யப்பட்டு அரசின் திட்டங்களில் வெளிப்படைத் தன்மை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த சுதந்திரத்தின் அமிர்த காலம், ‘அனைவரின் முயற்சிக்கு' ஏற்ற தருணம். ஒவ்வொரு இந்தியரின் கடின உழைப்பும், வலிமையும் செயல்பாட்டிற்கு வரும்போது, வளர்ந்து இந்தியா என்ற கனவை நிறைவேற்ற முடியும்.

***
 


(Release ID: 1920080)

PKV/RR/SG



(Release ID: 1920475) Visitor Counter : 123