அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

இந்திய புத்தொழில் நிறுவனங்கள் உலகளாவிய வரையறைகளை நிர்ணயிக்கின்றன

Posted On: 31 MAR 2023 2:20PM by PIB Chennai

இந்தியாவின் புத்தொழில் (ஸ்டார்ட் அப்) நிறுவன சூழல் உலகளாவிய  தரவரிசையில் முன்னணி இடத்தை எட்டியுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர்  திரு ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

புதுதில்லியில் ஸ்ரீபத்மாவதி வெங்கடேஸ்வரா அறக்கட்டளை நிறுவனத்தால் வழங்கப்படும் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சா விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், கல்வி நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள், ஆய்வு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் போன்றவை இணைந்து செயல்பட்டால் அதிக பலன்கள் கிடைக்கும் என்று கூறினார். அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறையில் இந்தியா, மேலும் முன்னேற  வேண்டியது அவசியம் என்று அவர் தெரிவித்தார். கொவிட் பெருந்தொற்று காலத்தில் நாட்டின் உயிரி தொழில்நுட்பத்துறை  மரபணு அடிப்படையிலான உலகின் முதல் தடுப்பூசியை உருவாக்கியதாக அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீபத்மாவதி வெங்கடேஸ்வரா அறக்கட்டளை  வளரும் விஞ்ஞானிகளை ஊக்குவிப்பதற்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறையில் அரசுடன் தனியார் துறையும் இணைந்து பணியாற்றும் போது முன்னேற்றத்தின் வேகம் இரட்டிப்பதாக அவர் கூறினார். உயிரி அறிவியல் மற்றும் வேளாண் அறிவியல் துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு இந்நிகழ்ச்சியில் பரமஹம்சா விருதுகளை திரு ஜிதேந்திர சிங் வழங்கினார்.

***

AD/PLM/RS/KRS



(Release ID: 1912642) Visitor Counter : 109