தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிதித்தொகுப்பு புதுப்பிப்பு

Posted On: 08 FEB 2023 1:43PM by PIB Chennai

கடந்த 23.10.2019 அன்று மத்திய அரசு பிஎஸ்என்எல்,  எம்டிஎன்எல் ஆகியவற்றை புதுப்பிப்பதற்கு ஒப்புதல் வழங்கியது. இதன் விளைவாக பிஎஸ்என்எல்,  எம்டிஎன்எல் ஆகியவை  இபிஐடிடிஏ (வட்டி விகிதத்திற்கு முந்தைய வருவாய்கள், வரிகள், தேய்மானம் மற்றும் தவணைகளில் கடனை திருப்பிச் செலுத்துங்கள்) என்ற வரையறைக்குள் கடந்த 2020-21 நிதியாண்டிலிருந்து வந்தது.  மேலும் 27.07.2022 அன்று மத்திய அரசு பிஎஸ்என்எல்-ஐ புதுப்பிக்க ரூ.1.64 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்தது. இதன்கீழ்,      பிஎஸ்என்எல் சேவைகள், அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீடு, கண்ணாடி இழை (ஃபைபர்) நெட்வொர்க் அமைப்பை வலுப்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை     உள்ளடக்கியது.

     இந்தத் தகவலை நாடாளுமன்றத்தில் இன்று மத்திய தொலைத் தொடர்புத் துறை இணை அமைச்சர் திரு தேவுசிங் சௌகான் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897270

***

AP/GS/UM/GK



(Release ID: 1897350) Visitor Counter : 129


Read this release in: English , Urdu , Telugu