குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

நாட்டின் 74 ஆவது குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து

Posted On: 25 JAN 2023 2:22PM by PIB Chennai

நாட்டின் 74 ஆவது குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் திரு ஜெக்தீப் தன்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது,

74 ஆவது குடியரசு தினக் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சியாக அமைய நாட்டு மக்கள் அனைவரும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 

நமது அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ள தொன்மை வாய்ந்த நாகரீக விழுமியங்கள் மீது கொண்டுள்ள நம்முடைய நம்பிக்கையை புதுப்பித்துக் கொள்ளும் வாய்ப்பை குடியரசு தினம் வழங்கியிருக்கிறது.  நாம் குடியாட்சியை பெறுவதற்கு தங்களது தன்னிகரில்லா தியாகங்கள் மூலம் அடித்தளம் அமைத்த புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள், தலைசிறந்த கொள்கைவாதிகள் மற்றும் அறியப்படாத தலைவர்கள் குறித்து நாம் அறிந்து கொள்ளவும் இந்த குடியரசு தினம் வாய்ப்பு அளித்திருக்கிறது. 

இந்த நன்னாளில் நம்முடைய சாதனைகளைக் கொண்டாடுவதுடன், தேசத்தைக் கட்டி எழுப்பும் முயற்சிக்கு நம்மை முழுமையாக அர்ப்பணிக்கவும் உறுதியேற்றுக் கொள்வோம்.

***

AP/ES/PK/KRS



(Release ID: 1893642) Visitor Counter : 170