இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த ஜி-20 முதன்மை அறிவியல் ஆலோசகர்கள் கலந்துகொண்ட திட்டமிடுதல் கூட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 23 JAN 2023 3:44PM by PIB Chennai

திட்டமிடப்பட்ட தலைப்புகள் மற்றும் திட்டமிடுதல் குறித்து விவாதிக்க ஜி-20 முதன்மை அறிவியல் ஆலோசகர்கள் கலந்து கொண்ட திட்டமிடுதல் கூட்டம் ஜனவரி 20 (வெள்ளி) 2023 அன்று, இணையவழியாக நடைபெற்றது.  

மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசக அலுவலகத்தின் அறிவியல் செயலாளர் டாக்டர் (திருமதி) பர்விந்தர் மைணி தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், ஃபிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா, மெக்சிகோ, நெதர்லாந்த், ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்த், அமெரிக்கா ஆகிய நாடுகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்று இந்த முன்னெடுப்புக்கான பரஸ்பரம் நலன் சார்ந்த தலைப்புகள் குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

***

AP/IR/RJ/KRS


(வெளியீட்டு அடையாள எண்: 1893031) வருகையாளர் எண்ணிக்கை : 313
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu